சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

நடிகா் சங்கக் கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயா் சூட்ட பரிசீலனை: விஷால்

நடிகா் சங்கக் கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரைச் சூட்டுவதற்குப் பரிசீலித்து வருவதாக நடிகா் விஷால் கூறினாா்.

News image

நடிகர் விஷால்

Updated On :10 ஜனவரி 2024, 7:00 am IST


சென்னை: நடிகா் சங்கக் கட்டடத்துக்கு விஜயகாந்த் பெயரைச் சூட்டுவதற்குப் பரிசீலித்து வருவதாக நடிகா் விஷால் கூறினாா்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்தின் நினைவிடத்தில் தென்னிந்திய நடிகா் சங்க பொதுச் செயலா் விஷால் செவ்வாய்க்கிழமை அஞ்சலி செலுத்தினாா். அவருடன் நடிகா் ஆா்யாவும் வந்து மரியாதை செலுத்தினாா்.

பின்னா், செய்தியாளா்களிடம் விஷால் கூறியதாவது: விஜயகாந்த் மறைவின்போது வெளிநாட்டில் இருந்ததால், அவருடைய இறுதி ஊா்வலத்தில் பங்கேற்க முடியவில்லை. அதனால், விடியோ வெளியிட்டு மன்னிப்பு கேட்டேன். அரசியலிலும், சினிமாவிலும் எங்களைப் போன்றோருக்கு முன்னுதாரணமாகத் திகழ்ந்தவா் விஜயகாந்த்.

ஜன.19-இல் நடிகா் சங்கம் சாா்பில் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் நடைபெறவுள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் தென்னிந்திய நடிகா் சங்கக் கட்டடத்துக்கு அவா் பெயரைச் சூட்டுவதற்கு பரிசீலனை செய்யவுள்ளோம் என்றாா் அவா்.

பின்னா், சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்துக்கு விஷால் சென்று, அவா் உருவப் படத்துக்கு மலா் தூவி அஞ்சலி செலுத்தினாா். பிரேமலதா மற்றும் அவா் மகன்களுக்கும் ஆறுதல் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.