'அந்தாதுன்' பட இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் இணைந்து நடிக்கும் படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. 'அந்தாதுன்' படம் பெரும் வெற்றி பெற்றதால் ஸ்ரீராம் ராகவன் இயக்கும் படம் என்பதால் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தப் படத்தில் ராதிகா சரத் குமார், சஞ்சய் கபூர், தினு ஆன்ந்த உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இதையும் படிக்க: ஹாலிவுட் தரத்தில் தமிழ்ப்படம்: அயலான் இயக்குநர் ரவிக்குமார்
இந்தப் படம் கடந்தாண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் அன்று வெளியாக இருந்தது. ஆனால் வெளியீட்டுத் தேதி தள்ளிப் போனது. இப்படம் பொங்கல் வெளியீடாக 2024, ஜனவரி 12 ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.
இந்நிலையில் இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், “விஜய் சேதுபதி-கத்ரீனாவின் நடிப்பை பார்த்து பிரமித்தேன். அழகான த்ரில்லராக எழுதப்பட்ட இந்தப் படத்தில் இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் நம்மை ஹிட்ச்காக் காலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார். பிரிதமின் இசை படத்துக்கு முக்கியமான தூணாக இருக்கிறது. கடைசி 30 நிமிடம் மிகவும் நன்றாக இருக்கிறது. திரையரங்குகளில் ஜன.12-இல் கண்டுகளியுங்கள். மக்கள் செல்வன் விஜய் சேதுபதியை நினைத்து பெருமையாக இருக்கிறது. மெனக்கெடாமலே எளிதாக அனைத்தையும் அவரது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்” எனப் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: நாளைய நாயகிகள்! இன்ஸ்டாகிராம் ரீல்ஸில் அசத்தும் பெண்கள்!

தமிழில் அயலான், கேப்டன் மில்லர் ஆகிய பெரிய படங்களுக்கு மத்தியில் மெரி கிறிஸ்துமஸ் படத்துக்கு குறைவான எண்ணிக்க்கையிலேயே தமிழகத்தில் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஹிட்ச்காக்
பிரபல இயக்குநர் ஆல்பிரட் ஹிட்ச்காக் த்ரில்லர் படங்களுக்கு பெயர்போனவர். அவரை சினிமா விமர்சகர்கள் த்ரில்லர் மன்னன் என்றழைப்பார்கள். மெரி கிறிஸ்துமஸ் இயக்குநரும் அவரது ரசிகன் என பல நேர்காணல்களில் கூறியுள்ளார்.

ஸ்ரீராம் ராகவன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கபினியில் நீர் திறப்பு 27,000 கன அடியாக அதிகரிப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!

பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் முன்னிலை!

காவிரி ஆற்றில் சுற்றித் திரியும் முதலைகள்: சுற்றுலாப் பயணிகள் அச்சம்
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



