கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

இந்தப் புகழுக்கு காரணம் நானல்ல... அர்ஜுன் தாஸ் நெகிழ்ச்சி!

நடிகர் அர்ஜுன் தாஸ் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து பேசியதாவது...

அஜித்துடன் அர்ஜுன் தாஸ். - படம்: எக்ஸ் / அர்ஜுன் தாஸ்.

Published On :

நடிகர் அர்ஜுன் தாஸ் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து மிகவும் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன் தாஸ் நடிப்பில் கடந்த ஏப்.10ஆம் தேதி உலகம் முழுக்க வெளியானது.

கலவையான விமர்சனம் வந்தாலும் அஜித் ரசிகர்களுக்கு படம் மிகவும் பிடித்துள்ளதால் முதல்நாளில் தமிழ்நாட்டில் ரூ.38 கோடி வசூலித்துள்ளது.

இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ள அர்ஜுன் தாஸ் நடிப்பும் ரசிகர்களால் பாராட்டப்பட்டு வருகிறது.

இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அர்ஜுன் தாஸ் கூறியதாவது:

ரசிகர்களின் அன்புக்கு மிக்க நன்றி. மிகவும் தன்னடக்கமாக உணர்கிறேன். இந்தப் பாராட்டுகள் என்னைச் சேர்ந்ததல்ல. 2013இல் இருந்தே என் மீது நம்பிக்கை வைத்த அஜித் சார், என்னை நம்பி படத்தில் வாய்ப்பளித்த சகோதரர் ஆதிக் ரவிச்சந்திரன் இருவருக்குமே சேரும்.

அதிக நேசங்களுடன் ஜேஜே எனக் குறிப்பிட்டுள்ளார்.

நடிகர் அர்ஜுன் தாஸ் இந்தப் படத்தில் ஜானி, ஜேமி என்ற இரண்டு கதாபாத்திரங்களில் நடித்துள்ளதால் ஜேஜே எனக் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.