முதல்வர் விஜய் அரசு வேலை வழங்கியிருப்பதும் ஒருவகை லஞ்சம்தான்: பாஜக36 குடும்பங்களில், வெறும் 31 பேருக்கு மட்டும் அரசுப் பணி ஏன்? டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து 95.32 ஆக நிறைவு!ஐடி பங்குகள் உயர்வு எதிரொலி: சென்செக்ஸ் 828 புள்ளிகளுடனும், நிஃப்டி 244 புள்ளிகள் உயர்வு!செந்தில் பாலாஜியின் வெற்றிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!செந்தில் பாலாஜிக்கு எதிரான தேர்தல் வழக்கு தள்ளுபடி!வங்கதேசம் திரும்பப் போவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு! திருச்சி கிழக்கு உள்பட 5 தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு இடைக்காலத் தடை!
/

ஆஸ்கரில் புதிய பிரிவு!

ஆஸ்கர் விருதில் புதிய பிரிவு...

News image
Updated On :12 ஏப்ரல் 2025, 4:49 pm IST

ஆஸ்கர் விருதுப் பிரிவில் புதிய பிரிவை இணைந்துள்ளனர்.

திரைத்துறையில் மிக உயரிய விருதுகாகக் கருதப்படும் ஆஸ்கர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

2025-ம் ஆண்டுக்கான 97-வது ஆஸ்கர் விருது விழா அண்மையில் அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரில் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது. இதில், அனோரா திரைப்படம் 5 விருதுகளை அசத்தியது.

இந்த நிலையில், ஆஸ்கரின் 100-வது ஆண்டு விழாவிலிருந்து (2028 ஆம் ஆண்டு) சிறந்த சண்டை வடிவமைப்புக்கான பிரிவும் ஆஸ்கர் விருது பட்டியலில் இணைக்கப்படும் என தி அகாதெமி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதுகுறித்து அகாதெமி வெளியிட்ட பதிவில், “ திரைப்படங்களின் மேஜிக்குகளுக்கு சண்டைகளும் பாகங்களாகவே இருக்கின்றன. இனி அவை ஆஸ்கர் விருதுப்பட்டியலிலும் இருக்கும். 2028-ல் ஆஸ்கரின் 100-வது விழாவிலிருந்து சண்டை வடிவமைப்புக்கான விருது வழங்கப்படும். 2027 ஆம் ஆண்டு வெளியாகும் படங்கள் பரிந்துரை பட்டியலில் இடம்பெறும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.