
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தொடர் 1469 எபிசோடுகளுடன் நிறைவடைந்தது.
கணவரால் ஏமாற்றப்பட்டு கைவிடப்பட்டப் பெண், சுயமாக முன்னேறி, எப்படி குடும்பத்தைக் கவனிக்கிறாள் என்பதை கருவாக வைத்து இத்தொடர் எடுக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு முதல், 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தொடர், கடந்த வெள்ளிக்கிழமை(ஆக. 8) நிறைவடைந்தது.
கதைப்படி, பாக்கியலட்சுமியின் கணவர் கோபி திருந்தி, பாக்கியலட்சுமி உடன் இணைகிறார், கோபியின் இரண்டாவது மனைவி ராதிகாவை, பாக்கியலட்சுமி ஏற்றுக்கொண்டு குடும்பம் ஒன்றாக இணைகிறது. இத்துடன் இனியா - ஆகாஷ் திருமணம் நடக்கிறது.
இவ்வாறாக பாக்கியலட்சுமி தொடரின் கிளைமேக்ஸ் ஆனது பல்வேறு திருப்புமுனைக் காட்சிகளுடன் நிறைவடைந்துள்ளது.
இத்தொடரில் நடிக்கும் ஒவ்வொரு நடிகர்களும், இந்தத் தொடரில் நடிக்கும்போது கிடைத்த அனுபவங்களையும், சக நடிகர்களுடான நட்பினையும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
5 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி வந்த பாக்கியலட்சுமி தொடர், சிலருக்கு சலிப்பை ஏற்படுத்தி இருந்தாலும், பலருக்கு சற்று சோகத்தையே ஏற்படுத்தி இருப்பதாக சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
பாக்கியலட்சுமி தொடர் ஒளிபரப்பாகி வந்த இரவு 7 மணிக்கு, திங்கள்கிழமைமுதல் மகாநதி தொடர் ஒளிபரப்பாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: தொலைக்காட்சியிலும் வெளியாகும் மாமன்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.