நடிகை நந்திதா ஸ்வேதா தனது மோசமான நாள்களை எப்படி கடந்தேன் எனக் கூறியுள்ளார்.
கன்னடத்தைச் சேர்ந்த நடிகை நந்திதா ஸ்வேதா (35 வயது) தமிழில் அட்டக்கத்தி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார்.
எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய், நெஞ்சம் மறப்பதில்லை ஆகிய படங்களில் சிறப்பாக நடித்துள்ளார்.
இவரது நடிப்பில் கடைசியாக ரத்தம், ரணம் படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில், ரசிகர்களின் கேள்விக்கு இன்ஸ்டாவில் பதிலளித்துள்ளார். அதில், உங்களது மோசமான நாள்களை எப்படி எதிர்கொண்டீர்கள் எனக் கேட்கப்பட்டது.
இந்தக் கேள்விக்கு நந்திதா கூறியதாவது:
அனைவருக்குமே இந்த நிலைமைவரும் சரிதானே. நான் வெறுமனே இவையனைத்தும் நல்லது என்கிறேன்.
இந்த மாதிரி நேரங்களில் நான் எனது மொபைலை ஸ்விட்ச் ஆஃப் செய்து விட்டு, படுக்கையில் படுத்துக்கொண்டே இருப்பேன். நான் என்ன செய்து கொண்டிருந்தாலும் அதை விட்டுவிடுவேன். அடுத்த நாளை நேர்மறையாகத் தொடங்குவேன் என்றார்.
தற்போது, கன்னடத்தில் புதிய படத்தில் நாயகியாக நடித்து வருகிறார்.
Summary
Actress Nandita Swetha has revealed how she got through her bad days.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

தாய் கிழவி இயக்குநருக்கு கார் பரிசளித்த சிவகார்த்திகேயன்!

ரூ. 350 கோடியுடன் 50 நாள்களை நிறைவு செய்த சூர்யாவின் கருப்பு!

நாயகியாக இருப்பதன் சவால்... ஓராண்டை நிறைவு செய்த வாரிசு தொடர்! நடிகை ஸ்வேதா உருக்கம்!







