மதுரை எய்ம்ஸ் புறநோயாளிகள் பிரிவு ஜனவரி 1 முதல் தொடக்கம்! பெரியார் பிறந்த நாள்: மு.க. ஸ்டாலின் மரியாதை! சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு!சமூக ஏற்றத்தாழ்வுகளுக்கு எதிராக வாழ்ந்தவர் பெரியார்! அண்ணாமலை புகழாரம்!முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன் காலமானார்!பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்துமதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு - டிரோன் மூலம் புனித நீர் தெளிப்பு!லண்டன் பயணத்தை முடித்துக்கொண்டு சென்னை திரும்பினார் முதல்வர் விஜய்!‘பெரியார் விதைத்த சமூகநீதியின் விதைகள் தழைத்தோங்கட்டும்!’ - முதல்வர் விஜய்மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் குடமுழுக்கு கோலாகலம்!

கூலியால் வார் - 2 படத்துக்கு சிக்கல்?

ரஜினியின் கூலி படத்தால் வார் - 2 படம் பின்னடைவைச் சந்தித்துள்ளது...

Published On :

கூலி திரைப்படத்தால் வார் - 2 திரைப்படம் சிக்கலைச் சந்தித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியீட்டுக்குத் தயாரான கூலி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

புக் மை ஷோ (book my show) ஆன்லைன் டிக்கெட் தளத்தில் படம் வெளியாவதற்கு 3 நாள்களுக்கு முன்பாகவே கூலி திரைப்படத்திற்கு 10 லட்சம் டிக்கெட்கள் விற்பனையாகியுள்ளது திரைத்துறையினரிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில், கூலி வெளியாகும் ஆக. 14 ஆம் தேதியில் நடிகர்கள் ஹ்ருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் நடித்த வார் - 2 திரைப்படமும் வெளியாகவுள்ளது.

ஆனால், வார் - 2 திரைப்படத்திற்குப் பெரிய வரவேற்பும் ஆன்லைன் முன்பதிவும் நடைபெறவில்லை. இதனால், படக்குழுவினர் கடும் அதிர்ச்சியில் உள்ளனர்.

கூலி தமிழ்ப்படமாக இருந்தாலும் ஆமீர் கான், நாகர்ஜூனா உள்ளிட்டோர் படத்தில் நடித்திருப்பதால் இந்தியளவில் எதிர்பார்ப்பு இருப்பது வார் - 2 படத்துக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

Summary

war 2 movie had a trouble for rajini's coolie release

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.