இயக்குநர் வெங்கட் பிரபு நடிகர் சிவகார்த்திகேயனுடான திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
விஜய்யின் 68-வது படமான `கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T. - Greatest Of All Times) படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அடுத்ததாக யாரை வைத்து இயக்குவார் என எதிர்பார்ப்புகள் இருந்தன.
நடிகர் அஜித்துடன் இணைய வாய்ப்புள்ளதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால், நடிகர் சிவகார்த்திகேயன் படத்தை இயக்குவதாக உறுதியான தகவல் வெளியானது.
இந்த நிலையில், இக்கூட்டணி குறித்துப் பேசிய வெங்கட் பிரபு, “நடிகர் சிவகார்த்திகேயனுடனான திரைப்படம் நிச்சயம் வித்தியாசமான நகைச்சுவைப் படமாக இருக்கும். கதையைக் கேட்ட அவரும் தயாரிப்பு நிறுவனமும் மகிழ்ச்சியாக உள்ளனர். இதுவரை பார்க்காத எஸ்கேவை இப்படத்தில் பார்க்கலாம்.” எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: இந்த சாதனையைச் செய்த முதல் இந்திய சினிமா கூலிதான்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.