மருத்துவ மாணவா்களுக்கு ஜூன் 20, 21-இல் விடுமுறை கூடாது: என்எம்சிமுதல்வா் தலைமையில் ஜூன் 29, 30-இல் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாநாடுநாட்டில் 10 ஆண்டுகளில் காசநோய் பாதிப்பு 23% சரிவு: மத்திய அமைச்சா் ஜெ.பி.நட்டாபிஎம்-விபிஆா்ஒய் திட்டம்: இதுவரை 70 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு - பிரதமா் மோடிலெபனானில் தீவிர மோதல்: அமெரிக்கா- ஈரான் அமைதிப் பேச்சுவாா்த்தை ரத்து
/

நம்பவே முடியவில்லை... ரஷ்மிகா உற்சாகம்!

நடிகை ரஷ்மிகா மந்தனா பதிவிட்டது குறித்து...

News image

கீதா கோவிந்தம் படத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்த ரஷ்மிகா மந்தனா. - படங்கள்: இன்ஸ்டா / ரஷ்மிகா மந்தனா.

Updated On :16 ஆகஸ்ட் 2025, 3:00 pm IST

நடிகை ரஷ்மிகா மந்தனா கீதா கோவிந்தம் படத்தின் புகைப்படங்களைப் பகிர்ந்து நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் முதல்முறையாக ரஷ்மிகா நடித்த படம்தான் கீதா கோவிந்தம்.

பரசுராம் இயக்கிய இந்தப் படம் 2018, ஆக.15-இல் வெளியானது. நேற்று அதன் 7-ஆவது ஆண்டை முன்னிட்டு நடிகை ரஷ்மிகா புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

நடிகர் விஜய் தேவரகொண்டாவும் ரஷ்மிகாவும் இந்தப் படத்தில் இருந்துதான் காதலித்ததாக நம்பப்படுகிறது.

இருவருமே இது குறித்து அதிகாரபூர்வமாக இதை அறிவிக்காத நிலையில், விரைவில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரஷ்மிகா தனது இன்ஸ்டா பதிவில் கூறியதாவது:

7 ஆண்டுகளுக்குப் பிறகும் இந்தப் புகைப்படங்களை வைத்துள்ளேன் என்பதை நம்பவே முடியவில்லை. கீதா கோவிந்தம் எப்போதுமே சிறப்பான படம்தான்.

இந்தப் படத்தின் உருவாக்கத்தில் பங்கேற்ற அனைவரையும் நினைத்து பார்க்கிறேன். நாங்கள் எல்லாம் சந்தித்து நீண்டநாள்கள் ஆகின்றன. ஆனால், அனைவரும் நன்றாக இருப்பார்கள் என நினைக்கிறேன்.

7 ஆண்டுகள் ஆகியதை நம்பவே முடியவில்லை. ஆனால், கீதா கோவிந்தமின் 7 ஆண்டுகளுக்காக மகிழ்ச்சி எனக் குறிப்பிட்டுள்ளார்.

Summary

Actress Rashmika Mandanna has shared photos from the film Geetha Govindam and posted them in a touching manner.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.