மக்கள் தொகை கணக்கெடுப்பு: தமிழகத்தில் ஆக.1 - 30 வரை வீடுகள் கணக்கீடு : இணையத்தில் இன்றுமுதல் மக்கள் சுயமாக விவரம் பதிவிடலாம்கரூா், ஈரோடு, தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்டங்களில் இன்று வெப்ப அலை மழைக்கால கூட்டத் தொடா்: இன்று பாஜக கூட்டணி கூட்டம் நாட்டின் முதல் ஹைட்ரஜன் ரயில்: இன்று தொடங்கி வைக்கிறாா் பிரதமா் - ரயில்வே துறையில் புதிய அத்தியாயம் சென்னை மாநகராட்சியில் கடந்த ஆண்டைவிட டெங்கு பாதிப்பு குறைவு
/

பராசக்தியில் அப்பாஸ்!

நடிகர் அப்பாஸ் மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்துகிறார்...

News image
Updated On :17 ஆகஸ்ட் 2025, 3:22 pm IST

நடிகர் அப்பாஸ் பராசக்தி திரைப்படத்தில் இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக இருந்த நடிகர் அப்பாஸ் பல வெற்றிப்படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார். காதல் தேசம், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மின்னலே, திருட்டு பயலே உள்ளிட்ட படங்களில் பேசக்கூடிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்.

திரைத்துறையில் வாய்ப்புகள் குறைய விளம்பரங்களில் நடித்தார். மெல்ல மெல்ல அங்கிருந்தும் மறைந்தவர் தன் குடும்பத்துடன் நியூசியாலந்தில் வசித்து வந்தார். தற்போது, இந்தியாவுக்குத் திரும்பியுள்ளர்.

இந்த நிலையில், மீண்டும் திரைப்படங்களில் நடிக்க அப்பாஸ் ஆர்வம் காட்டி வருகிறார்.

நடிகர் ஜிவி பிரகாஷ் நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை அண்மையில் நடைபெற்றது.

அடுத்ததாக, நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் பராசக்தி திரைப்படத்திலும் அப்பாஸ் நடிக்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. நடிகர் அப்பாஸ் மீண்டும் சினிமாவுக்கு வந்தது அவரது ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Summary

actor abbas will act in sivakarthikeyan's parasakthi movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.