மாணவர்கள் போராட்டம்: பாஜகவிடம் பதில் இல்லை! அகிலேஷ் யாதவ்மாணவரையே குற்றவாளியாக்கி உண்மையை மறைக்கப் பார்க்கிறதா, தவெக அரசு? - கனிமொழி கேள்வி!வெற்றி தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாடு: முதல்வர் நாளை தொடக்கி வைக்கிறார்!இரண்டாவது நாளாக சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் நிறவைு!புறக்கணிக்கப்பட்ட அரசுப் பள்ளிகளுக்காக பிரசாரம்! சிஜேபி அபிஜீத் தீப்கே முன்னாள் நீதிபதி யஷ்வந்த் வர்மா மீதான குற்றச்சாட்டுகள் உண்மை! நாடாளுமன்றக் குழு அறிவிப்பு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ. 95.33 ஆக நிறைவு!சென்னையில் 4 மடங்கு உயர்ந்த சொத்து வரி! அதிர்ச்சியில் மக்கள்! குட்டிக்கதை, சினிமா வசனம், பாட்டு: பட்ஜெட் விவாதத்தில் அசத்திய அமைச்சர் மரிய வில்சன்!தமிழ்நாட்டில் இருந்து ஒரு பிரதமர் உருவாக்கப்பட வேண்டும்: பேரவையில் ஆதவ் அர்ஜுன் பேச்சு
/

ஹிந்தியில் ரீமேக்காகும் பெருசு!

பெருசு திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் ஆகிறது...

News image
Updated On :17 ஆகஸ்ட் 2025, 12:05 pm IST

பெருசு திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

அறிமுக இயக்குநர் இளங்கோ ராம் இயக்கிய திரைப்படம் பெருசு. கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பென்ச் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தில் வைபவ் நாயகனாகவும் சுனில், பால சரவணன், ரெடின் கிங்ஸ்லி, முனீஸ்காந்த், நிஹாரிகா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்திருந்தனர்.

மரணப்படுக்கையில் இருக்கும் குடும்பப் பெரியவரின் இறப்பில் நேரும் ஒரு சம்பவம் பற்றிய துயர நகைச்சுவைக் கதையாக ’அடல்ட் காமெடி’ பாணியில் பெருசு படம் உருவாகியிருந்தது.

இந்தப் படம் கடந்த மார்ச் 14 ஆம் தேதி அன்று திரையரங்குகளில் வெளியாகி நல்ல விமர்சனங்களைப் பெற்றதுடன் வணிக ரீதியாகவும் வெற்றிப்படமானது.

இந்த நிலையில், இப்படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தை ஹன்சல் மேத்தா இயக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.

பெருசு திரைப்படம் சிங்களப் படமான டெண்டிகோ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.