சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் புகார்!

வேடன் மீது அடுத்தடுத்து பாலியல் புகார்கள் வந்துள்ளன...

News image
Updated On :18 ஆகஸ்ட் 2025, 1:22 pm IST

பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர்.

மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் ராப் பாடகர் வேடன். வேற்றுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பாடி வருவதால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. சுயாதீன பாடகராக மட்டமல்லாமல் திரைப்படங்களிலும் பாடி வருகிறார்.

சில நாள்களுக்கு முன், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வேடன் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் மருத்துவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

இந்த வழக்கிற்காக வேடன் முன்ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார். அந்த விசாரணை இன்று நடைபெறுகிறது.

இந்த நிலையில், வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைப் புகாரை அளித்துள்ளனர்.

அதில் ஒரு பெண் இசை விவாதம் செய்வதற்காகக் கொச்சிக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மற்றொரு பெண் வேடனின் இசையால் ஈர்க்கப்பட்ட தன்னை வேடன் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.

இது வேடன் ரசிகர்களிடையையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து பாலியல் புகார்களைச் சந்திப்பதால் மலையாள திரைத்துறையினரிடம் சலசலப்பு எற்பட்டுள்ளது.

Summary

rap singer vedan had faces two more sexual allegations

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.