பிரபல ராப் பாடகர் வேடன் மீது மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை புகார் அளித்துள்ளனர்.
மலையாள திரையுலகில் மிகவும் பிரபலமானவர் ராப் பாடகர் வேடன். வேற்றுமைகளுக்கும், அடக்குமுறைகளுக்கும் எதிராகத் தொடர்ந்து பாடி வருவதால் இவருக்கென தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகியுள்ளது. சுயாதீன பாடகராக மட்டமல்லாமல் திரைப்படங்களிலும் பாடி வருகிறார்.
சில நாள்களுக்கு முன், தன்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறி வேடன் பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் மருத்துவர் ஒருவர் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
இந்த வழக்கிற்காக வேடன் முன்ஜாமீன் கேட்டு மனு அளித்திருந்தார். அந்த விசாரணை இன்று நடைபெறுகிறது.
இந்த நிலையில், வேடன் மீது மேலும் இரண்டு பெண்கள் பாலியல் வன்கொடுமைப் புகாரை அளித்துள்ளனர்.
அதில் ஒரு பெண் இசை விவாதம் செய்வதற்காகக் கொச்சிக்கு அழைத்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், மற்றொரு பெண் வேடனின் இசையால் ஈர்க்கப்பட்ட தன்னை வேடன் பாலியல் ரீதியாகப் பயன்படுத்திக் கொண்டதாகவும் புகாரில் தெரிவித்துள்ளனர்.
இது வேடன் ரசிகர்களிடையையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடுத்தடுத்து பாலியல் புகார்களைச் சந்திப்பதால் மலையாள திரைத்துறையினரிடம் சலசலப்பு எற்பட்டுள்ளது.
இதையும் படிக்க: மஞ்ஞுமல் பாய்ஸ் இயக்குநரின் புதிய பட போஸ்டர்!
Summary
rap singer vedan had faces two more sexual allegations
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
பாலியல் வன்கொடுமை அதிகரிப்பு: பிரேமலதா குற்றச்சாட்டு

பாடகர் வேடன் அணிந்திருந்தது உண்மையான சிறுத்தைப்பல் என ஆய்வில் உறுதி! விரைவில் வழக்கு?

சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் மறுப்பு- தில்லி உயா்நீதிமன்றம்

பிரிஜ் பூஷண் மீது பாலியல் புகார் அளித்தது யார்? : வினேஷ் போகத் விடியோவில் விளக்கம்
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


