முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

ஏஜிஎஸ் தயாரிப்பில் அர்ஜுனை இயக்கும் அறிமுக இயக்குநர்!

நடிகர் அர்ஜுனின் புதிய படம் குறித்து...

News image

ஏஜிஎஸ் தயாரிப்பில் அர்ஜுனை இயக்கும் அறிமுக இயக்குநர்... - படங்கள்: எக்ஸ் / ஏஜிஎஸ், அர்ஜுன்.

Updated On :20 ஆகஸ்ட் 2025, 5:58 pm IST

நடிகர் அர்ஜுனின் புதிய படம் குறித்து ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் புதிய அப்டேட் வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்துக்கான பூஜை தொடங்கப்பட்டதாக ஏஜிஎஸ் தயாரிப்பு நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் நாயகனாகவும் நடிகை அபிராமி நாயகியாகவும் நடிகை ப்ரீத்தி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கிறார்கள்.

லவ் டுடே படத்தின் துணை இயக்குநர் சுபாஷ் இந்தப் படத்தினை இயக்குகிறார். இவர் ’கற்றது வீண்’ என்ற குறும்படத்தை இயக்கியுள்ளார்.

இந்நிலையில், இவரது திறமையை நம்பி ஏஜிஎஸ் நிறுவனம் தங்களது 28-ஆவது படத்தை தயாரிக்கிறது.

இது குறித்து அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

கதைகளுக்கு உயிர்கொடுக்கவும் புதிய திறமைகளை அறிமுகப்படுத்தவும் எங்களுக்குப் பிடிக்கும். உங்களது ஆசிர்வாதத்துடன் எங்களது அடுத்த படமான ஏஜிஎஸ்28-ஐ அறிமுகப்படுத்துகிறோம்.

ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடிக்க சுபாஷ் ராஜ் இயக்குகிறார் எனக் குறிப்பிட்டுள்ளார்.

பிரதீப் ரங்கநாதன் நடித்து இயக்கிய லவ் டுடே படத்தினை ஏஜிஎஸ் தயாரித்தது குறிப்பிடத்தக்கது.

Summary

AGS Productions has released a new update regarding actor Arjun's new film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.