கிளாஸ்கோ காமன்வெல்த் போட்டிகள் இன்று தொடக்கம்! ஈரான் போருக்கு அமெரிக்கா ரூ. 3.6 லட்சம் கோடி செலவு! டாஸ்மாக் ஊழியா்களுக்கு அக்.1 முதல் இஎஸ்ஐ திட்டம் அறிவிப்பு நீதிபதிகளின் ஓய்வு வயதை 61-ஆக உயா்த்த பரிசீலினை: மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் வலியுறுத்தல் மூலக்கூறு மருந்துகள் இறக்குமதி மீது 100% வரி: அமெரிக்கா திட்டத்தால் இந்தியாவுக்கு பாதிப்பு தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்!
/

மார்ஷலில் கார்த்திக்கு வில்லனாகும் ஆதி?

மார்ஷல் திரைப்படத்தில் நடிகர் ஆதி வில்லனாக நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது...

News image

நடிகர்கள் கார்த்தி - ஆதி பினிசெட்டி

Updated On :22 ஆகஸ்ட் 2025, 4:49 pm IST

நடிகர் கார்த்தியின் ”மார்ஷல்” திரைப்படத்தில் அவருக்கு வில்லனாக நடிகர் ஆதி பினிசெட்டி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

நடிகரும், இயக்குநருமான தமிழ்-ன் இயக்கத்தில், நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “மார்ஷல்”. நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன், நடிகர்கள் சத்யராஜ், பிரபு, லால், ஜான் கொக்கென் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் புதுமையான போஸ்டர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், ராமநாதபுரத்தைச் சேர்ந்த கப்பல் ஓட்டும் கேங்ஸ்டர்களின் கதை என்று கூறப்படும், இந்தப் புதிய படத்தின் வில்லனாக நடிகர் ஆதி பினிசெட்டி நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னதாக, இந்தப் படம் இரு பாகங்களாக வெளியாகும் என சினிமா வட்டாரங்களில் பேசப்படும் நிலையில், வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழுவினர் முதலில் நடிகர் நிவின் பாலியை அனுகியதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Summary

Reports have emerged that actor Aadhi Pinichetty will play the villain in actor Karthi's film "Marshal".

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.