பிரபல திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித்தின், நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலியான ஆடிஷன் அழைப்புகள் விடுக்கப்படுவதாகவும், இதனால் நடிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான பா.ரஞ்சித், “நீலம்” எனும் பெயரில் தயாரிப்பு நிறுவனம் மற்றும் அறக்கட்டளை ஆகியவற்றை நடத்தி வருகின்றார்.
இந்நிலையில், நடிப்பில் ஆர்வம் கொண்டு வாய்ப்புத் தேடும், மக்களை ஏமாற்றும் நோக்கில் நீலம் தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் போலியான ஆடிஷன் அழைப்புகள் விடுக்கப்படுவதாகவும், அதனை யாரும் நம்பவேண்டாம் எனவும் அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து, நீலம் தயாரிப்பு நிறுவனத்தில் எக்ஸ் தளப் பக்கத்தில் கூறப்பட்டிருந்தாவது:
“போலியான ஆடிஷன் எச்சரிக்கை! நீலம் ப்ரொடக்ஷன்ஸ் பெயரில் ஆடிஷன் அழைப்புகளை விடுக்கும் போஸ்டர்கள் இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றன. அவை அனைத்தும் போலியானைவை என்பதை நாங்கள் உறுதிப்படுத்துகின்றோம்” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், நீலம் தயாரிப்பு நிறுவனத்தால் நடத்தப்படும் ஆடிஷன்களின் அழைப்புகள் அவர்களது அதிகாரப்பூர்வ எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களின் மூலமாக மட்டுமே அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் பிலிம்ஸ் மற்றும் நடிகர் தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் ஆகிய தயாரிப்பு நிறுவனங்களின் பெயர்களிலும் போலியான ஆடிஷன் அழைப்புகள் விடுக்கப்படுவதாகக் கூறி, அந்நிறுவனங்கள் எச்சரிக்கை விடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: விஷால் 35 படத்தில் இணைந்த அஞ்சலி!
Summary
Famous film director Pa. Ranjith's Neelam production company has announced that fake audition calls are being made in the name of the company, and actors should be wary of this.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








