மஹிந்திரா லாஜிஸ்டிக்ஸ் காலாண்டு லாபம் ரூ. 29 கோடியாக உயர்வு!அல்ட்ராடெக் சிமெண்ட் காலாண்டு லாபம் 17% உயர்வு!மேக்கேதாட்டு அணை: கர்நாடக அரசை எதிர்த்து தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம்!இயற்கை எரிவாயு மையத்தில் முதல்வர் விஜய் ஆய்வு!துப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன்!மாணவர்கள் மீது தடியடி நடத்துவதுதான் ஜனநாயகமா? பிரதமர் மோடிக்கு ராகுல் கேள்விதுப்பாக்கி முனையில் மிரட்டிய காவல் துறை: கைதான திமுக எம்.எல்.ஏ.டிராமா செய்கிறார் திமுக எம்.எல்.ஏ! - நிர்மல் குமார்பேச்சுவார்த்தைக்கு பதிலாக வன்முறையைத் தேர்வு செய்த பாஜக: கனிமொழி விமர்சனம்
/

நான் படிக்கணும்! முத்தையாவின் சுள்ளான் சேது டீசர்!

இயக்குநர் முத்தையாவின் சுள்ளான் சேது டீசர்..

News image
Updated On :27 ஆகஸ்ட் 2025, 12:53 pm IST

இயக்குநர் முத்தையா மகன் விஜய் நடித்த சுள்ளான் சேது திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் கிராம வாழ்க்கையைத் திரைப்படுத்தி கவனம் ஈர்த்த இயக்குநர்களில் ஒருவரான முத்தையா குட்டிப்புலி மூலம் சினிமாவுக்கு அறிமுகமானவர்.

தொடர்ந்து, கொம்பன், மருது, தேவராட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கினார். இறுதியாக, இவர் இயக்கத்தில் வெளியான விருமன், காதர் பாட்ஷா என்கிற முத்துராமலிங்கம் ஆகிய படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

தற்போது, தன் மகன் விஜய் முத்தையாவை நாயகனாக வைத்து சுள்ளான் சேது என்கிற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில், நடிகர் பரத் வில்லனாகவும் சமுத்திரகனி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், ஆக்சன் திரைப்படமாக உருவான இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். பள்ளி மாணவனான கதை நாயகன் சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரச்னைகளில் சிக்கி அதிலிருந்து வெளிவரும் கதையாக படம் உருவாகியுள்ளதாகத் தெரிகிறது.

Summary

director muthaih's sullan sethu movie teaser out now

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.