இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிக அரசுப் பணி ஆணை!வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!ஃபென்ஜால் புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவு!ஒரே நாளில் 8 கொலைகள்; தவெக அரசுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய பிரேமலதா!சிப்காட், என்.எல்.சி சுரங்கத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தல்: அன்புமணி கண்டனம்!ஆசிய விளையாட்டு: வெள்ளி வென்றார் இளவேனில்!

மூன் வாக் - 5 பாடல்களையும் பாடிய ஏ. ஆர். ரஹ்மான்!

மூன் வாக் படத்திற்காகப் 5 பாடல்களைப் பாடிய ஏ. ஆர். ரஹ்மான்...

ar rahman

ஏ. ஆர். ரஹ்மான்

Published On :

இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் முதல்முறையாக ஒரு திரைப்படத்தின் அனைத்து பாடல்களையும் பாடியுள்ளார்.

இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா தமிழில் அடுத்தடுத்த படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிப்பில், பேட்ட ராப் படம் உருவாகிவரும் நிலையில், தற்போது புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.

பிஹைண்ட்வுட்ஸ் (Behindwoods) வழங்கும் இந்தத் திரைப்படத்தை, அந்நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் மனோஜ் என்எஸ் இயக்கி வருகிறார்.

மூன் வாக் எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இரண்டு கதாநாயகிகளுடன் பிரபு தேவா நடிக்க, நகைச்சுவை கலந்த திரைப்படமாக உருவாகி வருகிறது.

இத்திரைப்படம் 2026 கோடை வெளியீடாகத் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற 5 பாடல்களையும் இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மானே பாடியுள்ளதாக இயக்குநர் அறிவித்துள்ளார்.

அதிகபட்சம் ஒரு திரைப்படத்தில் ஒரு பாடலைப் பாடிவந்த ரஹ்மான், முதல் முறையாக அனைத்து பாடல்களையும் பாடியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Summary

ar rahman sungs 5 songs in moon walk movie

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.