

இந்திய நடிகை ஆலியா பட்டிற்கு செங்கடல் திரைப்பட விழாவில் கோல்டன் குளோப் விருது வழங்கப்பட்டுள்ளது.
ஆசிய திரைப்பட உலகத்தில் ஆலியா பட்டின் சிறந்த பங்களிப்பிற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
சௌதி அரேபியாவில் ஆண்டுதோறும் நடைபெறும் செங்கடல் திரைப்பட விழாவில் சிறப்பான நடிகர், நடிகைகளுக்கு விருதுகளும் வழங்கப்படுகின்றன.
கடந்தமுறை ஆமிர் கானுக்கு விருது வழங்கப்பட்டது. 5-ஆவது ஆண்டாக தற்போது இந்த திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.
தனது தொடக்க காலத்தில் மிகுந்த ஆர்வமாக நடித்ததாக ஆலியா பட் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார். ஓமர் ஷெரிஃப் விருதை துனிசிய நடிகை ஹெண்ட் சப்ரி வென்றார்.
கோல்டன் குளோப் விருது அமைப்பின் தலைவர் ஹெலன் ஹொயினே இந்த விருதினை ஆலியா பட்டிற்கு வழங்கினார். இது குறித்து அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியதாவது
கோல்டன் குளோப் ஓரிஸான் விருதினை ஆலியா பட்டிற்கு கிடைத்ததில் வாழ்த்துகள்.
மத்திய ஆசிய, ஆசிய, மற்றும் அதனையும் தாண்டிய பாதிப்புகளை தனது ஆற்றலினால் உண்டாக்கிய இயல்புக்கு மீறிய திறமைசாலி ஆலியா பாட்.
முதல்முறையாக செங்கடல் திரைப்பட விழாவுடன் கோல்டன் குளோப் இணைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
உலகில் உள்ள அனைத்து கலைஞர்களுக்கும் இந்த விருது சென்று சேரவேண்டுமென நினைக்கிறேன்.
ஹெண்ட், ஆலியா ஆகிய இருவரும் வருங்கால சர்வதேச திரைப்படத்தை தங்களது தைரியம், கலை நேர்த்தி, நிற்காத நோக்கத்தினால் வடிவமைக்கிறார்கள் எனக் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.