துரோகம் செய்வது நன்றாகத் தெரியும்: செல்வராகவன்

இயக்குநர் செல்வராகவன் புதிய பதிவு...
செல்வராகவன்
செல்வராகவன்
Updated on
1 min read

இயக்குநர் செல்வராகவனின் பதிவு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில், இயக்குநர் செல்வராகவனுடனான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலிருந்து அவரது மனைவி கீதாஞ்சலி நீக்கியது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

இதற்கு முன், நேர்காணல் ஒன்றில் பேசிய செல்வராகவன், ‘அடுத்த 6 மாதத்தில் நான் சந்திக்கப்போகும் பெரிய பிரச்னை வரப்போகிறது’ எனக் கூறியிருந்தார். அதனையும் இதனையும் தொடர்புபடுத்தி செல்வராகவனுக்கு விவாகரத்தா? என ரசிகர்கள் கேள்வியெழுப்பி வருகின்றனர். அதேநேரம், செல்வராகவன் தன் மனைவியுடான புகைப்படங்களை எதையும் நீக்கவில்லை.

இந்த நிலையில், செல்வராகவன் புதிய பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “திடீரென உங்களுக்கு அனைத்தும் தவறாய் போகும். சுற்றியுள்ளவர்கள் அனைவரும் துரோகம் செய்வது நன்றாய் தெரியும். நீயெல்லாம் கடவுளா ? உனக்கு எவ்வளவு பூஜை செய்து வழிபட்டேன் என பிதற்றுவீர்கள். அப்போது அமைதியாய் இருங்கள். சில காலம்தான். பெரும் மலை பனியாய் போகும். அனைத்தும் சரியாகி விடும்." எனக் கூறியுள்ளார்.

இதனால், இருவருக்கும் இடையே பிரச்னை என்பதைப் புரிந்துகொண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Summary

director selvaraghavan new post about treason

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com