

நடிகர் சூர்யா புதிய திரைப்படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடிப்பில் இறுதியாக வெளியான ரெட்ரோ படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது.
இதனை தொடர்ந்து சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படம் அடுத்தாண்டு திரைக்கு வருகிறது. இதனையடுத்து இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா 46 படத்தில் நடித்து வருகிறார்.
சூர்யா தன் 47-வது படமாக இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் நடிக்கிறார். இப்படத்திற்கான பூஜை அண்மையில் நடைபெற்றது.
இதில், சூர்யா காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், இன்று படப்பிடிப்பில் காவல்துறை அதிகாரி தோற்றத்தில் சூர்யா கலந்துகொண்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், சிங்கம் - 3 திரைப்படத்துக்குப் பின் சூர்யா மீண்டும் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: அவதார் ஃபயர் அண்ட் ஆஷ் முதல் நாள் வசூல் இவ்வளவா?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.