கிராமங்கள் மற்றும் நகரங்களைச் சேர்ந்த ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடர் என்ற பெருமையைப் பெற்றுள்ளது அய்யனார் துணை தொடர்.
ஒருசில தொடர்கள் நகர்புற ரசிகர்களைக் கவரும் வகையில் இருக்கும், கிராம ரசிகர்களைக் கவரும் தொடராக வேறுசில தொடர்கள் இருப்பது வழக்கம். ஆனால், இருதரப்பு ரசிகர்களிடமும் அதிக வரவேற்பை பெற்ற தொடராக அய்யனார் துணை மாறியுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8:30 மணிக்கு அய்யனார் துணை தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
இந்தத் தொடரில், எதிர்நீச்சல் பிரபலம் மதுமிதா நாயகியாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக கனா காணும் காலங்கள் பிரபலம் அரவிந்த் சேஜு நடிக்கிறார்.
இத்தொடரில் அரவிந்தின் சகோதரர்களாக முன்னா, பர்வேஷ், அருண் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். பாக்கியலட்சுமி தொடரில் ராமமூர்த்தி பாத்திரத்தில் நடித்த ரோசரி, இத்தொடரில் இவர்களுக்குத் தந்தையாக நடிக்கிறார்.
நான்கு சகோதர்கள் உள்ள தாய் இல்லாத வீட்டில் மூத்த மருமகளாக வரும் நாயகி (மதுமிதா), கூட்டு குடும்பத்தில் எதிர்கொள்ளும் சவால்களே இத்தொடரின் கதையாக உள்ளது.
விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வரும் இந்தத் தொடர் டிஆர்பி புள்ளிகள் அதிகம் பெற்று முன்னணி தொடராக இருந்து வருகிறது. இந்நிலையில் நகர்ப்புறங்களில் இந்தத் தொடர் 9.5 டிஆர்பி புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இதேபோன்று கிராமப்புறங்களில் 8.65 புள்ளிகளைப் பெற்று முதன்மை தொடராக உள்ளது. அதிகபட்சமாக கடந்த புதனிகிழமை எபிஸோட் 10.2 புள்ளிகளைப் பெற்றுள்ளது.
இதனால், நகர மற்றும் கிராமப்புறங்களில் உள்ள ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்ற தொடராக அய்யனார் துணை மாறியுள்ளது. அய்யனார் துணை குழுவுக்கு ரசிகர்கள் பலர் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
Summary
Ayyanar thunai serial get good rural urban response
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அய்யனார் துணை சீரியலில் பாக்கியலட்சுமி தொடர் நடிகை! பெருகும் எதிர்பார்ப்பு!

இனி வாரத்தின் 7 நாள்களும் ஒளிபரப்பாகும் 3 தொடர்கள்!

சந்தியா ராகம் தொடரில் கார்த்திகை தீபம் சீரியல் நடிகர்!

37 ஆண்டுகளுக்குப் பின் மறுவெளியீடு காணும் மோகன்லாலின் கிரீடம்!
விடியோக்கள்

ஜெயலலிதா போல் உண்ணாவிரதம் இருப்பாரா விஜய்? | TVK | CM Vijay | DkShivakumar | Jagadeswaran interview



