உதயநிதி ஸ்டாலின் கைது? நீலாங்கரை வீட்டின் முன்பு போலீஸ் குவிப்பு!தங்கம் விலை குறைந்தது! இன்றைய நிலவரம்நாளை பட்ஜெட் தாக்கல்: இன்று மாலை தவெக எம்எல்ஏக்கள் கூட்டம்!இன்று தமிழகத்தை அடைகிறது கா்நாடக அணை காவிரி நீா்!தமிழக பட்ஜெட் நாளை தாக்கல்: முக்கிய அறிவிப்புகள் வெளியாகின்றனஇந்தியப் பொருளாதாரம் 7.7% வளா்ச்சி!தமிழகத்தில் ஆக. 9 வரை மழைக்கு வாய்ப்புஉறுப்பு மாற்று சிகிச்சையில் தமிழகம் முதலிடம்!
/

60 நாள்களில் படப்பிடிப்பை முடித்த கென் கருணாஸ்!

கென் கருணாஸ் இயக்கிய அவரது முதல் படத்தின் படப்பிடிப்பு குறித்து...

News image

கென் கருணாஸ்... - படம்: எக்ஸ் / பார்வதா என்டர்டெயின்மென்ட்

Updated On :23 டிசம்பர் 2025, 9:37 pm IST

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் இயக்கிவந்த முதல் படம் தற்போதை நிறைவடைந்துள்ளது.

அவரே நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் சமீபத்தில் இணைந்தார்.

அம்பாசமுத்திரம் அம்பானி, நெடுஞ்சாலை படங்களின் மூலம் குழந்தை நட்சத்திரமாக திரைக்கு அறிமுகமானவர் கென் கருணாஸ்.

இயக்குநர் வெற்றி மாறன் - தனுஷ் கூட்டணியில் உருவான அசுரன் திரைப்படம் அவருக்குத் திருப்புமுனையாக அமைந்தது.

அப்படத்தைத் தொடர்ந்து விடுதலை - 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதற்கிடையே, தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் உதவி இயக்குநராக பணியாற்றி அனுபவம் பெற்றார்.

தானே இயக்கி நடிக்கும் இந்தப் படத்தினை பார்வதா என்டர்டெயின்மென்ட் கருப்பையா தயாரிக்கிறார்.

இப்படத்திற்கு ‘காதலன்’ எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், இப்படத்தில் சுராஜ் வெஞ்சரமூடு மற்றும் ஸ்ரீதேவி, அனிஷ்மா உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், படப்பிடிப்பு முடிவடைந்ததாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

விரைவி முதல் பார்வை போஸ்டர், முதல் பாடல் வெளியாகுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.