

இயக்குநர் சுதா கொங்கரா நடிகர் சூர்யா குறித்து பேசியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான பராசக்தி திரைப்படம் பொங்கல் வெளியீடாக ஜன. 10 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படம் தமிழ் மொழிக்கு எதிரான மொழித்திணிப்பைக் கேள்விகேட்கும் கதையாக உருவாகியுள்ளது. இயக்குநர் சுதா கொங்கராவின் முந்தைய படங்கள் கொடுத்த நம்பிக்கையை இப்படம் கொடுத்திருப்பதால் வெளியீட்டுக்கு எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் நேர்காணலில் பேசிய இயக்குநர் சுதா கொங்கரா, “நடிகர் சூர்யா பராசக்தியில் நடிக்க இருந்தார். ஆனால், அவர் படத்திலிருந்து விலகியதற்கு சரியான காரணம் தெரியவில்லை. ஆனால், அவருக்கான படப்பிடிப்பு நாள்கள் சாதகமாக இல்லாதது முக்கிய காரணம்.
பராசக்தி போன்ற திரைப்படத்தின் படப்பிடிப்பை முழுவீச்சாக நடத்தி முடிக்க வேண்டும். இடையில் நின்றால், பொருள்செலவு அதிகமாகும். சூர்யா இல்லையென்றானதும் நடிகர் சிவகார்த்திகேயன் தாமாகவே முன் வந்து பராசக்தியில் இணைந்தார்.” எனத் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.