

நடிகர் விஜய் சேதுபதி இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா கூட்டணி மீண்டும் இணைகிறது.
தமிழ் சினிமாவில் தனக்கென தனி ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் இயக்குநர் தியாகராஜன் குமாரராஜா. ஆரண்ய காண்டம் திரைப்படம் மூலம் கவனிக்கப்பட்டர், சூப்பர் டீலக்ஸ் மூலம் பரவலான பாராட்டுகளைப் பெற்றார்.
இறுதியாக, மார்டன் லவ் சென்னை இணையத்தொடரில் நினைவோ ஒரு பறவை படத்தை இயக்கியிருந்தார்.
இந்த நிலையில், நடிகர் விஜய் சேதுபதியை வைத்து தியாகராஜன் குமாரராஜா புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற பிப்ரவரி மாதம் துவங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
மீண்டும் விஜய் சேதுபதி - தியாகராஜன் குமாரராஜா கூட்டணி இணைந்துள்ளது ரசிகர்களிடம் ஆவலைத் தூண்டியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.