பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ரூ.100 கோடி வசூலை நோக்கி தண்டேல்!

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான தண்டேல் படம் ரூ.100 கோடி வசூலை நோக்கி பயணிக்கிறது.

தண்டேல் போஸ்டர் - படம்: எக்ஸ்/ கீதா ஆர்ட்ஸ்

Published On :

நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் வெளியான தண்டேல் படம் ரூ.100 கோடி வசூலை நோக்கி பயணிக்கிறது.

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவாகியுள்ள தண்டேல் படம் பிப்.7ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூலில் அசத்தி வருகிறது.

சுமார் 55 கோடி பட்ஜெட்டில் உருவான இந்தப் படம் உலகம் முழுவதும் ரூ. 80.12 கோடியை 5 நாளில் வசூலித்து அசத்தியுள்ளது.

இயக்குநர் சந்து மொந்தேத்தி இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

நாக சைதன்யாவின் கடைசியாக வெளியான கஸ்டடி படம் தோல்வியடைந்தது குறிப்பிடத்தக்கது.

சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் கடைசியாக வெளியான விராட பருவம், லவ் ஸ்டோரி ஆகிய திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன.

2 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை சாய் பல்லவி தெலுங்கில் நடித்து மீண்டும் ஹிட் அடித்துள்ளார்.

தண்டேல் போஸ்டர்.

தண்டேல் போஸ்டர். - படம்: எக்ஸ்/ கீதா ஆர்ட்ஸ்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.