நடிகை டாப்ஸி பல கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு திருமணம் செய்ததாகக் கூறியுள்ளார்.
டென்மார்க்கைச் சேர்ந்த மதியாஸ் போ என்பவரை காதலித்து மார்ச் 2024ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார்.

கணவருடன் நடிகை டாப்ஸி. - படம்: இன்ஸ்டா / டாப்ஸி
37 வயதான டாப்ஸி தென்னிந்திய படங்களில் நடித்து பிரபலமானவர். தற்போது ஹிந்தி சினிமாவில் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழில் ஆடுகளம், ஆரம்பம், காஞ்சனா 2, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து கவனம் ஈர்த்தார். நடிகையாக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் கலக்கி வரும் டாப்ஸி தற்போது 3 ஹிந்தி படங்களில் பணியாற்றி வருகிறார்.
பாட்மின்டன் திடலில் மலர்ந்த காதல்
தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்ற டாப்சி திருமணம் குறித்து பேசியதாவது:
நான் அவரை ஒரு பாட்மின்டன் திடலில் பார்த்தேன். நான் பார்வையாளராக இருந்தேன், அவர் போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தார். அது உள்ளூர் போட்டி. அங்குதான் நான் அவரைச் சந்தித்தேன்.
10 ஆண்டுகளாக அவரைத் தெரியும். தற்போது அவரை 11 ஆண்டுகளாகத் தெரிகிறது. நான் இதை யாரிடமும் மறைத்தது கிடையாது.
அவர் ஒரு கிரிக்கெட் வீரர் அல்லது தொழிலதிபர் அல்லாததால் மக்கள் அது குறித்து பெரிதாகக் கண்டுக்கொள்ளவில்லை. ஆனால், எப்போதெல்லாம் அவர் குறித்து கேள்வி கேட்கப்படுகிறதோ நான் அப்போதெல்லாம் பேசியிருக்கிறேன்.
பல பரிசோதனைகளுக்குப் பிறகு திருமணம் செய்தேன்
எனது திருமண வாழ்வு நன்றாக செல்கிறது. அவர் எனக்கு காதலைத் தெரிவித்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு திருமணம் செய்தேன்.
பல திருமணங்கள் இங்கு சரியாக அமையாமல் சென்றிருப்பதை நான் பார்த்துள்ளேன். அதைப் பார்த்து எனக்கும் பயமிருந்தது.
நாங்கள் இருக்கும் தொழில் பல வெற்றி தோல்விகளை சந்திக்கும்படி இருக்கிறது. அதனால் எனது தனிப்பட்ட வாழ்வில் தோல்விகள் அமையாதபடி இருக்க நினைக்கிறேன். அதனால் பல ஒத்திகைகள், பரிசோதனைகளுக்குப் பிறகு திருமணம் செய்தேன் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








