படப்பிடிப்பின்போது ஆட்டோ கண்ணாடி வெடித்துச் சிதறியதில் நடிகை வர்ஷினி சுரேஷுக்கு காயம் ஏற்பட்டுள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய நீ நான் காதல் தொடர் தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை வர்ஷினி சுரேஷ்.
இத்தொடரில் அபி என்ற பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்த இவர், தொடர்ந்து ஹார்ட் பீட் வெப் தொடரில் சோனியா என்ற பாத்திரத்தில் தன்னுடைய வித்தியாசமான நடிப்பை வழங்கி அசத்தினார்.
தற்போது, ஸ்டார் மா தொலைக்காட்சியில் ஓளிபரப்பாகி வரும் மகுவா ஓ மகுவா தொடரின் மறு உருவாக்கமாக எடுக்கப்படும் மகளே என் மருமகளே தொடரில் நடிகை வர்ஷினி சுரேஷ் நடிக்கிறார்.
இந்த நிலையில், வர்ஷினி சுரேஷ் நடிக்கும் தெலுங்கு தொடரான ஆட்டோ விஜயலட்சுமி சீரியல் படப்பிடிப்பின்போது, அவருக்கு முகத்தில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. இதை வர்ஷினி சுரேஷ் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ளார்.
அவருடைய பதிவில், “ படப்பிடிப்பில், சண்டைக் காட்சிகள் தொடர்பான காட்சி எடுக்கும்போது, நாங்கள் திட்டமிட்டப்படி நடக்காமல் ஆட்டோ கண்ணாடி வெடித்துச் சிதறியது.
கண்ணாடித் துண்டுகள் என் முகத்தின் இடத்தைப் பக்கத்தில் பட்டதில், சிறிய காயம் ஏற்பட்டதுடன், எனது இடது செவி கேளாமல் போனது.
இந்த விபத்து பெரியளவில் நடக்காமல் இருந்ததற்காக நன்றிக்கடன் பட்டுள்ளேன். இதற்காக அரைநாள் அவசர சிகிச்சைப் பிரிவில் இருந்தேன், பெரிய காயங்கள் ஏதுமில்லை. இப்பயணம் எப்படி கணிக்க முடியாமலும், தீவிரமாகவும் இருக்கிறது என்பதற்கான நினைவூட்டல் மட்டுமே.
விரைந்து வந்து கவனித்துக் கொண்ட எங்கள் குழுவுக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
நடிகை வர்ஷினி சுரேஷுக்கு அவரது ரசிகர்கள் கவனமுடன் பணியாற்றுமாறு ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Summary
Actress Varshini Suresh was injured when an auto glass shattered during filming.
இதையும் படிக்க: நாளை (ஜூலை 11) வெளியாகிறது ஃப்ரீடம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உத்தரமேரூா் அருகே ஆட்டோ டிரைவா் கொலை

ஆட்டோ கவிழ்ந்து மாணவா்கள் உள்பட 7 போ் காயம்

ஹோர்முஸ் நீரிணையில் அமெரிக்க ராணுவ ஹெலிகாப்டர் வெடித்துச் சிதறியது!

காா் - ஆட்டோ மோதல்: சிறுவன் பலி, 3 போ் காயம்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



