ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!

பென்ஸ் படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி இணைந்தது குறித்து...

News image

நிவின் பாலி. - படம்: எக்ஸ் / நிவின் பாலி

Updated On :4 ஜூன் 2025, 6:23 pm IST

பென்ஸ் படத்தில் மலையாள நடிகர் நிவின் பாலி இணைந்தது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் லோகேஷ் கனகராஜின் கதையில், பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நாயகானக நடிக்கும் படத்திற்கு பென்ஸ் எனப் பெயரிட்டுள்ளனர்.

எல்சியூ திரைப்படமாக இது உருவாகும் என லோகேஷ் அறிவித்திருந்தார்.

இப்படத்திற்கு அனிருத், சாம் சிஎஸ், சாய் அபயங்கர் ஆகியோர் இசையமைக்க உள்ளனர்.

அண்மையில் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது. ஆக்சன் பின்னணியில் உருவாகும் இப்படத்தின் சண்டைக் காட்சிகளைப் பிரம்மாண்டமாக எடுக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில், வால்டர் என்ற கதாபாத்திரத்தை அறிமுகம் செய்துள்ளனர். அது நடிகர் நிவின் பாலி என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் அது உறுதி செய்யப்பட்டுள்ளது.

தோல்விப்படங்களால் பாதிக்கப்பட்ட நிவின் பாலிக்கு பென்ஸ் திருப்புமுனையாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் மாதவன் நடிக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.