நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

டூரிஸ்ட் ஃபேமலி இயக்குநரை நேரில் சந்தித்து வாழ்த்திய நானி!

நடிகர் நானி டூரிஸ்ட் ஃபேமலி இயக்குநரை வாழ்த்தியது குறித்து...

Nani congratulates the director of Tourist Family

டூரிஸ்ட் ஃபேமலி இயக்குநரை வாழ்த்திய நானி. - படம்: இன்ஸ்டா / அபிஷன் ஜீவிந்.

Published On :14 ஜூன் 2025, 11:22 am IST

நடிகர் நானியைச் சந்தித்து டூரிஸ்ட் ஃபேமலி இயக்குநர் வாழ்த்து பெற்றார்.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் மே.1 ஆம் தேதி வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்தப் படத்தை நடிகர்கள் ரஜினி, சூர்யா, நானி, இயக்குநர் ராஜமௌலி என பலரும் தங்களது எக்ஸ் பதிவுகளில் பாராட்டி இருந்தார்கள்.

இந்நிலையில், இயக்குநர் அபிஷன் ஜீவிந் நானியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இளம் இயக்குநர்களை எப்போதும் உற்சாகமூட்டுபவராக நானி இருக்கிறார்.

சசிகுமாருடன் சிம்ரன், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் நடித்த இந்தப் படம் ரூ. 75 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

கடந்த ஜூன் 2 முதல் ஜியோ ஹாட்ஸ்டாரில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகியது.

நானியை சந்தித்தது குறித்து தனது இன்ஸ்டா பக்கத்தில் அபிஷன் ஜீவிந் கூறியதாவது:

என்ன ஒரு நாள்! நானி சார் உங்களை சந்தித்தது மிகவும் கௌரமானது. நீங்கள் மிகவும் தன்னடக்கமான மனிதர். நீங்கள் படத்தைப் பற்றி நுணுக்கமாக பேசியது என்னை கூடுதல் சிறப்பானவனாக உணர வைத்தது. நன்றி எனக் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.