மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்புலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு உத்வேகம்! இந்திய மகளிர் அணிக்கு மோடி பாராட்டு!விநாயகர் சதுர்த்தி: முதல்வர் விஜய் வாழ்த்துவட இந்திய பெருங்கடலில் அடுத்த 3 மாதங்களுக்குள் 3 புயல்கள்: கடும் சேதம் ஏற்பட வாய்ப்புவரலாற்றில் முதல்முறையாக மூன்றாவது இடத்தில் திமுக கூட்டணி: அமைச்சர்ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை திருமண மோசடி செய்தாரா? தொழிலதிபர் புகார்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்துப் புகழ் பெற்ற நடிகை ரிஹானா பேகம் மீது திருமண மோசடி புகார்.

pandian stores serial

சக நடிகைகளுடன் ரிஹானா பேகம் (மத்தியில்) - இன்ஸ்டாகிராம்

Published On :

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து புகழ் பெற்ற நடிகை ரிஹானா பேகம் மீது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் திருமண மோசடி புகார் அளித்துள்ளார்.

பொன்னி தொடரில் நாயகனின் அம்மாவாகவும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் சித்தி பாத்திரத்திலும் நடித்து புகழ் பெற்றவர் நடிகை ரிஹானா பேகம். தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து வருகிறார்.

இவர் மீது சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் ராஜ் கண்ணன் என்பவர் பூந்தமல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன்னை மோசடி செய்து திருமணம் செய்துகொண்டதாகப் புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்தப் புகாரில் ரிஹானாவுக்கு ஹிஸ்புல்லா என்பவருடன் முன்பே திருமணம் நடந்திருப்பதாகவும், ஆனால், அவரை விவாகரத்து செய்துவிட்டதாகக் கூறி தன்னைத் திருமணம் செய்துகொண்டார் எனத் தெரிவித்துள்ளார்.

ஹிந்து மத முறைப்படி திருமணம் நடந்த நிலையில், அடகு வைத்த நகைகளை மீட்பது, அடிக்கடி செலவுக்கு என இதுவரை லட்சக்கணக்கில் பணம் வாங்கியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 18.5 லட்சத்தை ரிஹானாவுக்கு கொடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

ஆனால், ஹிஸ்புல்லாவுடன் அவர் விவாகரத்து செய்யவில்லை என்பது பின்னாளில்தான் தனக்குத் தெரியவந்தது எனப் புகாரில் தெரிவித்துள்ளார். ரிஹானா தன்னை ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டதாகவும், இதனால், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நடிகை ரிஹானா

நடிகை ரிஹானா - இன்ஸ்டாகிராம்

சமூக வலைதளப் பக்கத்தில் சுறுசுறுப்பாக இயங்கக் கூடிய ரிஹானா, சின்ன திரை நடிகைகளின் பல்வேறு பிரச்னைகளுக்கு குரல் கொடுத்துள்ளார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அர்னவ் மற்றும் அவருடைய மனைவி திவ்யா ஸ்ரீதர் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக பிரச்னை ஏற்பட்டபோது திவ்யாவுக்கு ஆதரவாக ரிஹானா பேசியிருந்தார்.

இதேபோன்று, சின்ன திரை நடிகை சம்யுதா மற்றும் அவருடைய கணவருக்கு பிரச்னை ஏற்பட்ட போது சம்யுதாவின் கணவருக்கு ஆதரவாக ரிஹானா பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.