சின்ன திரை நடிகை மணிமேகலை ஞாயிற்றுக்கிழமை பணிக்குச் செல்வது குறித்து பதிவிட்டுள்ளார். அதற்கு ரசிகர்கள் பலர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
சின்ன திரையில் கடந்த சில நாள்களாக நிகழ்ச்சிகளின்றி இருந்த மணிமேகலை, ஜீ தமிழில் தற்போது நடன நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குகிறார். ஞாயிற்றுக்கிழமையன்றும் தான் பணிக்குச் செல்வது குறித்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கோமாளியாக நடித்து மக்கள் மனங்களைக் கவர்ந்த மணிமேகலை, ஒருகட்டத்துக்கு மேல் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் மாறினார்.
தனது நகைச்சுவை திறனாலும், சூழலைக் கையாளும் விதத்தாலும் நிகழ்ச்சியை முன்னகர்த்திச் சென்றார்.
எனினும் சில முரண்பாடுகள் காரணமாக குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து விலகுவதாக அறிவித்தார். அதற்கு விஜய் தொலைக்காட்சியின் மூத்த தொகுப்பாளர் பிரியங்காவே காரணம் எனவும் கூறப்பட்டது.
விஜய் தொலைக்காட்சியின் பிரபலங்களும் இந்த விவகாரத்தில் பிரியங்காவுக்கு ஆதரவு தெரிவித்து விடியோக்களைப் பதிவிட்டனர். ஆனால், ரசிகர்கள் பலர் மணிமேகலைக்கு ஆதரவாக நின்றனர்.
விஜய் தொலைக்காட்சியின் வேறு எந்த நிகழ்ச்சியிலும் மணிமேகலை பங்கேற்காமல் இருந்துவந்தார். இதனிடையே தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகவுள்ள டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் தொகுப்பாளராக மணிமேகலை மாறியுள்ளார்.
சினேகா, ரம்பா, வரலட்சுமி சரத்குமார், பாபா பாஸ்கர் உள்ளிட்டோர் நடுவர்களாகப் பங்கேற்கும் இந்நிகழ்ச்சியை ஆர்ஜே விஜய்யும் மணிமேகலையுடன் சேர்ந்து தொகுத்து வழங்குகிறார்.
இந்நிலையில் கடந்த சில நாள்களாகவே வேலையே இல்லாத சூழலில் தற்போது ஞாயிற்றுக்கிழமையும் பணிக்குச் செல்வதை குறிப்பிடும் வகையில் படங்களை தனது சமூகவலைதளப் பக்கத்தில் மணிமேகலை பகிர்ந்துள்ளார்.
இதில் மணிமேகலையின் விடாமுயற்சியையும், தன்னம்பிக்கையையும் பாராட்டும் வகையில் பலரும் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதையும் படிக்க | புதிதாய் தொழில் தொடங்கிய சின்ன திரை ஜோடி!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இந்த மனிதர்களுக்காக ஆசிர்வதிக்கப்பட்டுள்ளேன்... நெகிழ்ச்சியில் ரம்யா பாண்டியன்!

கரூரில் முதல்வர் விஜய் - புகைப்படங்கள்

பணமா ஜனமா.. என்றால் எனக்கு ஜனம்தான் முக்கியம்: முதல்வர் விஜய்!

மக்கள் சந்திப்பு! மேடைக்கு வந்தார் முதல்வர் விஜய்!
விடியோக்கள்

கொளத்தூர் வாக்கு எந்திரங்கள் சரிபார்ப்பு! " தவறுகள் இதுவரை கண்டறியப்படவில்லை" - சமீரன் பேட்டி



