குட் பேட் அக்லி திரைப்படத்தை ஹிந்தியில் அதிக திரைகளில் வெளியிடத் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள குட் பேட் அக்லி திரைப்படம் ஏப். 10 ஆம் தேதி பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது.
சில நாள்களுக்கு முன் வெளியான படத்தின் டீசர் ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் படத்திற்கான வணிகமும் பெரிதாக இருக்கும் என்றே தெரிகிறது.
இதையும் படிக்க: டெஸ்ட் வெளியீட்டுத் தேதி!
முக்கியமாக, உலகளவில் 2000 திரைகள் வரை திரையிடப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், பான் இந்திய வெளியீடாகத் திரைக்கு வரும் இப்படத்தை ஹிந்தியில் அதிக திரைகளில் வெளியிட தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் திட்டமிட்டு வருகிறதாம்.
புஷ்பா, புஷ்பா - 2 படங்களைத் தயாரித்த மைத்ரி மூவிஸுக்கு குட் பேட் அக்லியே முதல் தமிழ்ப் படம் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









