வீர தீர சூரன் படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.
சித்தா படத்தின் இயக்குநர் சு. அருண்குமார் இயக்கத்தில் நடிகர்கள் விக்ரம், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு, நடிகை துஷாரா விஜயன் நடிப்பில் வீர தீர சூரன் படம் உருவாகியுள்ளது.
தங்கலான் கொடுத்த வெற்றியால் விக்ரமின் வீர தீர சூரன் மீதும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்தில் வெளியான 2 பாடல்கள், டீசர் கவனம் ஈர்த்துள்ளது. இப்படத்தை மார்ச் 27 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் படத்தின் தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் படத்தைப் பார்த்து தனது எக்ஸ் தளத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
மிகவும் மகிழ்ச்சியான கணங்கள். படத்தை தணிக்கைக்கு அனுப்பும்முன் எங்களுக்கு கியூப் திரையரங்கில் இந்த அற்புதமான படத்தை எங்களுக்குக் காட்டிய மிகவும் திறமையான உண்மையான திரை எழுத்தாளர்-இயக்குநர் சு.அருண்குமாருக்கு நன்றி.
விக்ரமிடமிருந்து மிகவும் எதார்த்தமான, கல்ட்-கமர்ஷியல். இது விக்ரமின் சிறந்த படங்களில் ஒன்று. மார்ச்.27ஆம் தேதி முதல் ரசிகர்கள், பார்வையாளர்களிடம் இருந்து பாராட்டுகளைப் பெற காத்திருக்கிறேன் எனக் கூறியுள்ளார்.
வீர தீர சூரன் இரண்டாம் பாகம் முதலில் வெளியாகிறது. இதன் முதல் பாகம் அடுத்ததாக வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் ஜீ.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஹெச்.ஆர். பிக்சர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள்.
த்ரில்லராக உருவாக்கப்பட்டுள்ள இந்தப் படம் மிகவும் நீளமான சீன்களைக் கொண்டதாக இருக்குமென அதில் நடித்த நடிகர்கள் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Most happiest moments ð¤ð
— Shibu Thameens (@shibuthameens) March 15, 2025
Tnx to most talented and truest #SUArunkumar ( THE WRITER-DIRECTOR)
on showing us his outstanding craft #VeeraDheeraSooran
at QUBE cinema before sending the content to censor
A raw,
cult -commercial
from @chiyaan
One of Sirâs top most
Await⦠pic.twitter.com/bbt19ugkKx
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

எம்ஜிஆர் படம் பார்த்த உணர்வு... ஜன நாயகன் படத்தைப் பாராட்டித் தள்ளிய பேரவைத் தலைவர்!

கேத்தனைக் கொல்ல கூலிப்படை! கைதாவதற்கு முன்பு சியா பார்த்த விடியோ விவரங்கள் கசிந்தன

நடிகர்கள் கார்த்தி, விக்ரமுக்கு தேசிய விருது இல்லையா?ஆதங்கப்படும் ரசிகர்கள்!

வீர தீர செயல் புரிந்த குழந்தைகள் பால் புரஸ்காா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
விடியோக்கள்

ரயிலில் Solar Panel-கள்? இந்திய ரயில்வேயின் புதிய முயற்சி! | Indian Railways

யார் இந்த துணிச்சலான பெண்! காவல் வாகனத்தை தனி ஆளாக தடுத்து நிறுத்தியவர்! | CJP | BJP

CJP போராட்டத்தில் இனி...? | DINAMANI EXCLUSIVE | Dharmendra Pradhan | BJP | Abhijeet Dipke



