அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கத்தில் உருவான மனிதர்கள் திரைப்படத்தின் டிரைலர் கவனம் ஈர்த்து வருகிறது.
தமிழ் சினிமாவில் ஆண்டிற்கு 200 படங்களுக்கு மேல் வெளியானாலும் அதில் சுவாரஸ்யமான, கவனிக்கும்படியான படங்களும் அமைந்து விடுகின்றன.
அப்படி, அறிமுக இயக்குநர் ராம் இந்திரா இயக்கிய, ‘மனிதர்கள்’ திரைப்படம் ஓர் இரவில் நண்பர்களுக்குள் நடக்கும் கொலை மற்றும் அதைத் தொடர்ந்து மாறும் மனநிலைகளென மனித மன ஊசலாட்டங்களைக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது.
ஒரே இரவில் நடக்கும் கதையாக கிரைம் திரில்லர் பாணியில் எடுக்கப்பட்ட இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. நண்பர்கள் மற்றும் ரசிகர்களிடமிருந்து பணம்பெற்று கிரவுட் ஃபண்டிங் மூலம் இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்த நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்து வருவதுடன் சில காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.