காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

துடரும் பட வில்லனுக்கு குவியும் பாராட்டுகள்: முதல் படத்திலேயே அசத்திய பிரகாஷ் வர்மா!

துடரும் படத்தின் வில்லன் பிரகாஷ் வர்மா குறித்து...

Prakash Varma, villion of Thudarum film.

பிரகாஷ் வர்மா. - படம்: ஜியோ ஹாட்ஸ்டார்.

Published On :

துடரும் படத்தின் வில்லன் பிரகாஷ் வர்மாவை (52) ரசிகர்கள் பாராட்டி வருகிறார்கள்.

இயக்குநர் தருண் மூர்த்தி இயக்கத்தில் மோகன்லால் - ஷோபனா நடிப்பில் உருவான துடரும் திரைப்படம் கடந்த ஏப். 25 ஆம் தேதி திரையில் வெளியானது.

ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் இதுவரை ரூ. 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்தப் படத்தில் வில்லனாக அறிமுகமான பிரகாஷ் வர்மா படம் வெளியான சமயத்தில் இருந்தே ரசிகர்களின் பாராட்டைப் பெற்றுவருகிறார்.

இந்தப் படம் இன்று (மே.30) ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியானது. தற்போது, ரசிகர்கள் மீண்டும் பிரகாஷ் வர்மாவின் நடிப்பை மிகவும் புகழ்ந்து வருகிறார்கள்.

யார் இந்த பிரகாஷ் வர்மா?

மக்களிடம் கவனத்தை ஈர்த்த ஓடோஃபோனின் ஜூஜூஸ், பிஸ்லேரி, கிட் கேட் போன்ற விளம்பரங்களை இவர் இயக்கியுள்ளார்.

பிரபல மலையாள இயக்குநர் ஏ.கே.லோகிததாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

தயாரிப்பாளராக இருந்துவரும் இவர் அமெரிக்க இயக்குநருக்காகவும் ஒரு விளம்பரத்தை இயக்கியுள்ளது கவனிக்கத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.