

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த மாரி தொடர், 1068 எபிசோடுகளுடன் முடிவடைந்தது.
மாரி தொடரில் நாயகியாக அஞ்சனா ஸ்ரீநிவாஸனும், நாயகனாக சுகேஷும் நடித்து வந்தனர்.
மூடநம்பிக்கைகளை மையப்படுத்தியும் அமானுஷ்ய காட்சிகள் கொண்ட திரைக்கதையுடனும் மாரி தொடர் எடுக்கப்பட்டு வந்ததால், இந்தத் தொடருக்கு மக்கள் மத்தியிலும் சிறுவர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு இருந்தது.
மாரி தொடரின் முதல் பாகம் ஜனவரி மாதத்துடன் நிறைவடைந்து, இரண்டாம் பாகம் ஒளிபரப்பாகி வந்தது.
இந்த நிலையில், இந்தத் தொடரின் பரபரப்பான இறுதிக்கட்ட கிளைமேக்ஸ் காட்சிகள் கடந்த வார இறுதியில் ஒளிபரப்பு செய்யப்பட்டு, 1068 எபிசோடுகளுடன் முடிவடைந்தது.
மாரி தொடர் ஒளிபரப்பாகி வந்த மாலை 6 மணிக்கு, தற்போது கெட்டி மேளம் தொடர் ஒளிபரப்பாகி வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: மகளே என் மருமகளே தொடரில் இணைந்த சிறகடிக்க ஆசை நடிகர்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.