நடிகர் துல்கர் சல்மான் காந்தா திரைப்படம் குறித்து பேசியுள்ளார்.
இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “காந்தா”. இந்தப் படம், மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்தத் திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலரை இன்று வெளியிட்டுள்ளனர்.
டிரைலர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய துல்கர் சல்மான், “காந்தா திரைப்படம் iஇதனுடன் தொடர்புடைய அனைவரின் வாழ்க்கையில் ஒருமுறை மட்டுமே அமையும் சினிமா. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தினோம் என நினைக்கிறேன்.
எனக்கு தமிழ் அவ்வளவு பிடிக்கும். நம் சினிமா கோடம்பாக்கத்திலிருந்துதான் மற்ற மாநிலங்களுக்குச் சென்றது. இப்படத்தில் அந்தக்கால சினிமா ஸ்டூடியோ கலாசாரங்களையும் அதன் கதைகளையும் அழகாக பதிவு செய்திருக்கிறோம். அதை நீங்கள் ரசிப்பீர்கள்” என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.