12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

மோகன்லாலின் விருஷபா படத்தின் ரிலீஸ் தேதி!

நடிகர் மோகன்லாலின் விருஷபா படத்தின் வெளியீட்டுத் தேதி பற்றி...

Vrusshabha film scenes.

விருஷபா படக் காட்சிகள். - படங்கள்: எக்ஸ் / மோகன்லால்.

Published On :

நடிகர் மோகன்லாலின் விருஷபா படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் மோகன் லால் - இயக்குநர் நந்தா கிஷோர் ஆகியோரது கூட்டணியில் வரலாற்று கதைகளத்துடன் “விருஷபா” என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

மலையாளம், தெலுங்கு மொழிகளில் படம்பிடிக்கப்பட்ட இந்தத் திரைப்படத்தில், நடிகர் மோகன் லால் அரசனாக நடித்துள்ளார்.

நடிகர்கள் சமர்ஜித் லங்கேஷ், ராகினி திவிவேதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்துக்கு, இசையமைப்பாளர் சாம் சி.எஸ். இசையமைத்துள்ளார்.

ஹிந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள இப்படம், வரும் கிறிஸ்துமஸை முன்னிட்டு டிச.25ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.

இது குறித்து நடிகர் மோகன்லால் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியதாவது:

சில கதைகள் திரைப்படத்தைத் தாண்டியவை, அவை மரபுவழியில் வந்தவை. இந்த கிறிஸ்துமஸுக்கு விருஷ்பாவின் வாழ்க்கைக்கு உயிர் கொடுத்திருப்பதைக் காணலாம்.

இந்தப் படம் உணர்ச்சி, பிரம்மாண்டம், விதியினை கொண்டாடும் விதமாக உருவாகியுள்ளது.

உலகம் முழுவதும் வரும் டிச.25ஆம் தேதி வெளியாகிறது எனக் கூறியுள்ளார்.

இந்தப் படத்துக்கான திரைக்கதையை இயக்குநர் நந்தா கிஷோர் ஐந்தாண்டுகளாக எழுதி வந்ததாகக் கூறியுள்ளார்.

Summary

The release date of actor Mohanlal's film Vrusshabha has been announced.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.