முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

நடிகை அனுபமாவின் மார்பிங் படங்களை வெளியிட்ட 20 வயது இளம்பெண்!

அனுபமா பரமேஸ்வரன் பெயரில் போலி இன்ஸ்டாகிராம் கணக்கில் மார்பிங் புகைப்படங்கள் பகிர்ந்த 20 வயது இளம்பெண்

News image
Updated On :9 நவம்பர் 2025, 10:41 am IST

நடிகை அனுபமா பரமேஸ்வரன் பெயரில் போலியான இன்ஸ்டாகிராம் கணக்கில் மார்பிங் புகைப்படங்கள் பகிர்ந்து வந்தது 20 வயது இளம்பெண்தான் என விசாரணையில் தெரிய வந்தது.

இதுகுறித்து அனுபமா பரமேஸ்வரன் வெளியிட்ட பதிவில், ``சில நாட்களுக்கு முன்பு, ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் என்னைப் பற்றியும், என் குடும்பத்தினர் பற்றியும், என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களைப் பற்றியும் மிகவும் பொருத்தமற்ற மற்றும் தவறான உள்ளடக்கத்தைப் பரப்புவதாகவும், என் நண்பர்கள் மற்றும் சக நடிகர்களை டேக் (Tag) செய்வதாகவும் எனக்கு தகவல் கிடைத்தது.

இதனையடுத்து, குறிப்பிட்ட அந்த போலி இன்ஸ்டா பக்கத்தில் மார்பிங் செய்யப்பட்ட படங்கள் மற்றும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் இருந்தது தெரிய வந்தது. இதுபோன்ற இலக்கு வைக்கப்பட்ட இணையவழியிலான துன்புறுத்தல்கள் மிகவும் வேதனையாக உள்ளது.

மேலும், இதுகுறித்த விசாரணையில், வெறுப்பைப் பரப்பும் ஒரே நோக்கத்துடன் ஒரே நபர் பல போலி கணக்குகளை உருவாக்கி, என்னைப் பற்றிய ஒவ்வொரு பதிவிலும் தவறான மற்றும் தீங்கிழைக்கும் உள்ளடக்கத்தைப் பதிவிட்டு கருத்து தெரிவித்து வந்துள்ளார்.

இதுகுறித்து அறிந்ததும், உடனடியாக கேரள சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தேன். அவர்களின் விரைவான விசாரணை மற்றும் உதவியுடன், இந்த நடவடிக்கைகளுக்குப் பின்னால் உள்ள நபர் அடையாளம் காணப்பட்டார்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், இந்தக் குற்றச் செயலில் ஈடுபட்டவர் 20 வயது இளம்பெண் என்றும், அவரது எதிர்காலத்தைக் கருத்திற்கொண்டு அவரது பெயர் அல்லது விவரத்தை அனுபமா வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.

இருப்பினும், அனுபமா பெயரில் போலியான மார்பிங் படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டவர், தமிழகத்தைச் சேர்ந்தவர்தான் என்று கூறப்படுகிறது.

Summary

Anupama Parameswaran Takes Legal Action After Morphed Pics On Fake Instagram Account

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.