

பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் முதல் திரைப்படமான ’சிவா’ மீண்டும் திரைக்கு வருகிறது.
இந்தப் படத்தில் நாகார்ஜுனா நாயகனாகவும் அமலா நாயகியாகவும் ரகுவரன் வில்லனாகவும் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் வெளியான சமயத்தில் மிகப்பெரிய பேரலையை ஏற்படுத்தியது.
புதுமையான காட்சி அமைப்புகள், சிங்கிள் ஷாட்டுகள் என இந்திய சினிமாவையே புரட்டிபோட்டது எனலாம். தெலுங்கு சினிமாவில் மிக முக்கியமான படமாகவும் இன்றளவும் இருந்து வருகிறது.
இந்தப் படம் வரும் நவ.14ஆம் தேதி திரையில் புதுப் பொலிவுடன் வெளியாகவிருக்கிறது.
இந்தப் படம் குறித்து புகழ்ந்து பேசிய நடிகர் சிரஞ்சீவி ஒரு விடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அதனைப் பகிர்ந்த இயக்குநர் ராம் கோபால் வர்மா, “நன்றி சிரஞ்சீவி அவர்களே, நான் தெரியாமல் எப்போதாவது உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள். உங்கள் பெரிய மனதிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி” எனக் கூறியுள்ளார்.
தற்போது, ராம் கோபால் வர்மா மனோஜ் பாஜ்பாயி உடன் இணைந்து புதிய படத்தினை இயக்கி வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.