எப்போது வேண்டுமானாலும் தேர்தல் வரலாம்: மு.க. ஸ்டாலின்தங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி: பிரதமர் மோடிதங்கம் வாங்காமல் இருந்ததற்காக மக்களுக்கு நன்றி! பிரதமர் மோடிதமிழக மக்கள் ஏசி பேருந்தில் செல்ல வேண்டும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்சென்னை, திருவள்ளூர் உள்பட 13 மாவட்டங்களில் நாளை (ஜூன் 29) மழைக்கு வாய்ப்பு!வெளிநாட்டிலிருந்து பரவும் நோயையும் போலியோ சொட்டுமருந்து தடுக்கும்: அமைச்சர் அருண்ராஜ்ஜவுளித்துறையில் 2031-க்குள் 350 பில்லியன் டாலர் இலக்கு: மத்திய அமைச்சர் கிரிராஜ் சிங்
/

முக்கியத்துவம் பெறும் நேரத்துக்கு மாற்றப்பட்ட மகளே என் மருமகளே தொடர்!

மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம் தொடர்பாக...

News image

மகளே என் மருமகளே தொடர் போஸ்டர் - படம்: ஹாட்ஸ்டார்

Updated On :16 நவம்பர் 2025, 2:35 pm IST

மகளே என் மருமகளே தொடர் பிரைம் டைம்(Prime Time) எனப்படும் முக்கியத்துவம் பெறும் நேரத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் இயக்குநர் ஹரிஸ் ஆதித்யா இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் தொடர் மகளே என் மருமகளே.

இந்தத் தொடரில் ரேஷ்மா பசுபுலேட்டி மாமியாராகவும் வர்ஷினி சுரேஷ் மருமகளாகவும் நடிக்கின்றனர். நாயகனாக நடிகர் அவினாஷ் நடிக்கிறார்.

மருமகள் மீது மிகுந்த பாசம் கொண்ட மாமியார், மாமியார் மீது அதிக அன்பு கொண்ட மருமகள், இருவருக்கு இடையே நிகழும் பாசப் பிணைப்பை மையப்படுத்தி இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.

மகளே என் மருமகளே தொடர் கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் திங்கள்கிழமை முதல் சனிக்கிழமை வரை மதியம் 3 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது.

இந்நிலையில், இந்தத் தொடருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததையடுத்து, ரசிகர்கள் அதிகம் விரும்பிப் பார்க்கும் நேரமான பிரைம் டைம் எனப்படும் மாலை 6 மணிக்கு மகளே என் மருமகளே தொடர் ஒளிபரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மகளே என் மருமகளே தொடரில் நவீன் என்ற பாத்திரத்தில் நடிகர் பிரணவ் இணைந்த நிலையில், பல திருப்புமுனைகள் ஏற்பட்டு, தொடரின் விறுவிறுப்பு கூடியுள்ள நிலையில், முக்கியத்துவம் பெறும் நேரத்துக்கு இந்தத் தொடர் மாற்றப்பட்டுள்ளது.

Summary

magale en marumagale serial change prime time slot

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.