24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!சென்னை ஐஐடியில் ஒன்றாகப் பட்டம் பெற்ற தாய்- மகன்!மூன்றாவது மொழி! சிபிஎஸ்இ மாணவர்களுக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு!மீண்டும் தலைதூக்கும் கரோனா பாதிப்பு! இந்த அறிகுறிகள் இருந்தால் கவனம்!கைரேகை, கருவிழி ஒற்றுமையுடன் இரட்டையர்கள்! ஆதார் புதுப்பிக்க என்னதான் வழி?அதிமுக எம்எல்ஏக்களை திருடும் முதல்வர் விஜய்தான் களவாணி: எடப்பாடி பழனிசாமிஅகழாய்வுப் பணிகளை தவெக அரசு தொடர வேண்டும்! மு.க. ஸ்டாலின் லண்டனில் இன்பநிதியின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட மு.க. ஸ்டாலின்!மருத்துவ அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கிய முதல்வர் விஜய்!
/

தொடர் வெற்றியைப் பெற்ற பிரணவ் மோகன்லால்!

பிரணவ் மோகன்லால் படங்கள் வெற்றியடைந்து வருகின்றன...

News image

பிரணவ் மோகன்லால்

Updated On :16 நவம்பர் 2025, 3:01 pm IST

நடிகர் பிரணவ் மோகன்லால் தொடர் வெற்றிகளைப் பெற்று அசத்தியுள்ளார்.

நடிகர் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் வளர்ந்துவரும் இளம் கதாநாயகனாக உள்ளார். அதேநேரம், மற் நடிகர்களைப் போல் இல்லாமல் உலகப் பயணங்களைச் செய்து வருவதுடன் பெரிய ஆடம்பரமில்லாத வாழ்க்கைச் சூழலையும் வைத்திருக்கிறார்.

இதனால், பல மலையாள நடிகர்களைப் போல் அடிக்கடி பொதுவெளியில் பிரணவ்வை சந்திக்க முடியாது. இதனால், அவர் எங்கிருப்பார், என்ன செய்து கொண்டிருப்பார் என மலையாள ரசிகர்களிடம் ஆர்வம் இருந்துகொண்டே இருக்கும்.

காரணம், பிரணவ்வின் பெரிய வெற்றிப்படமாக அமைந்த ஹிருதயப்பூர்வம் படத்திற்குப் பின் ஸ்பெயின் சென்று அங்கு தோட்டத்தில் வேலை செய்திருக்கிறார்.

அதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியான வருஷங்களுக்கு சேஷம் திரைப்படமும் ரூ. 50 கோடிக்கு அதிகமாக வசூலித்து வெற்றிப்படமானது.

தற்போது, இயக்குநர் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் உருவான டீயஸ் ஈரே ஹாரர் படமும் ரூ. 80 கோடிக்கு அதிகமாக வசூலித்து பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இதனால், பிரணவ் மோகன்லாலுக்கு தொடர் வெற்றிப்படங்கள் அமைந்திருக்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.