சீன நாள்காட்டியால்.. தமிழர்களின் நேபாள பயண திட்டம் மாறியதா? தில்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு கெடு விதித்த கரப்பான்பூச்சி மக்கள் கட்சி! காரணம் என்ன?ஒருநாள் விடுமுறைக்குப் பின் மீண்டும் கூடியது பேரவை! செங்கல்பட்டிலிருந்து சென்னை வர 3 மணி நேரம் ஆகிறது: ஆதவ் அர்ஜுனாகுழந்தைகள், முதியோரிடையே அதிகரிக்கும் காய்ச்சல் பாதிப்பு: தடுப்பூசி செலுத்த மருத்துவா்கள் அறிவுறுத்தல்

கலைமாமணி புகைப்படங்களைப் பதிவிட்டதில் தாமதம் ஏன்? சாய் பல்லவி விளக்கம்!

கலைமாமணி விருது புகைப்படங்களைப் பகிர்ந்த சாய் பல்லவி கூறியதாவது...

Sai Pallavi shared Kalaimamani Award photos.

கலைமாமணி விருது புகைப்படங்களைப் பகிர்ந்த சாய் பல்லவி. - படங்கள்: இன்ஸ்டா / சாய் பல்லவி.

Published On :17 நவம்பர் 2025, 12:39 pm IST

கலைமாமணி விருதுபெற்ற சாய் பல்லவி தனது இன்ஸ்டா பக்கத்தில் நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

சிறிய வயதில் இருந்தே இந்த விருதுக்காக ஏங்கியதாகக் கூறியுள்ளார்.

தமிழக அரசின் சார்பாக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் சிறந்த கலைஞர்களுக்கு அறிவிக்கப்பட்ட கலைமாமணி விருதுகள் வழங்கும் விழா சென்னை, கலைவாணர் அரங்கில் அக்.11ஆம் தேதி நடைபெற்றது.

2021, 2022 மற்றும் 2023-ஆம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகளில் நடிகை சாய் பல்லவிக்கும் வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது குறித்து அவர் கூறியதாவது:

நான் வளரும்போது இருந்தே கலைமாமணி விருது குறித்து கேள்விப்பட்டிருக்கிறேன். அந்த கௌரவத்தை நானும் பெற்றது மிகவும் நம்பமுடியாத அளவுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

தமிழக அரசு, முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திற்கு மிக்க நன்றி.

இந்தப் பதிவின் தாமதுக்கான காரணத்தை அறிய மூன்றாவது படத்தைப் பார்க்கவும். அவர்களுடன் புகைப்படம் எடுக்க முடியவில்லை அதனால்தான் எனக் கூறியுள்ளார்.

நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் புகழ்பெற்றார். நல்ல கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்க்கும் இவர் பல்வேறு விருதுகளைப் பெற்று வருகிறார்.

தற்போது, ராமாயணா பாகம் 1, 2-இல் நடித்து வருகிறார். கடைசியாக வெளியான அமரன் படத்திலும் சிறப்பான நடிப்பை வழங்கியிருந்தார்.

Summary

This honour is surreal says Sai Pallavi about her Kalaimamani

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.