12 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்லேகர் ஒப்புதல்!காய்ச்சல் பாதிப்புக்கு கூடுதல் கட்டணம் வசூல்: தனியாா் மருத்துவமனைகளுக்கு எச்சரிக்கைநீட்-சிறப்பு மருத்துவ இடங்களுக்கான தகுதி மதிப்பெண்ணை 30%-ஆக குறைக்கத் தயாா்: மத்திய அரசு6-ஆம் வகுப்பில் மும்மொழிக் கொள்கை: அமல்படுத்த உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் தொடா் ஆதரவு: ஐ.நா.வில் இந்தியா குற்றச்சாட்டு

நான் எங்கு இருக்கிறேன்? ஆல்யா மானசா வெளியிட்ட விடியோ

பாரிஜாதம் தொடரில் நடித்து வரும் நடிகை ஆல்யா மானசா புதிதாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஆல்யா மானசா - படம் - இன்ஸ்டாகிராம்

Published On :

பாரிஜாதம் தொடரில் நடித்து வரும் நடிகை ஆல்யா மானசா புதிதாக விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தான் இருக்கும் இடம் எது என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

சின்ன திரை நடிகை ஆல்யா மானசா கடந்த சில நாள்களுக்கு முன்பு ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த துபைக்கு பயணம் மேற்கொண்டார். அங்கு தனது குடும்பத்துடன் ஓய்வு நாள்களை செலவழித்தார்.

கணவருடன் துபையின் மிகவும் முக்கியமான கட்டடங்கள் மற்றும் பூங்காக்களில் இருந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

கணவர் மற்றும் குடும்பத்துடன் ஆல்யா மானசா

கணவர் மற்றும் குடும்பத்துடன் ஆல்யா மானசா - படம் - எக்ஸ்

தற்போது மெட்ரோ ரயிலில் நின்றவாறு பயணிக்கும் விடியோவை பகிர்ந்து, நான் எங்கிருக்கிறேன் என ரசிகர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காடிச்யில் பாரிஜாதம் தொடரில் நாயகியாக நடித்துவரும் ஆல்யா மானசா, சிங்கிள் பசங்க என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்று வருகிறார்.

தொடர்ந்து வேலைசெய்துகொண்டிருந்த ஆல்யா, குடும்பத்துடன் நேரத்தை செலவிடும் நோக்கத்தில் துபைக்குச் சென்றுள்ளார். சமூக வலைதளப் பக்கத்தில் ஆல்யாவை ரசிகர்கள் பலர் பின்தொடர்ந்து வருகின்றனர். இதனால் அவர் துபையில் இருப்பது அவரின் ரசிகர்கள் அறிந்த விஷயமாகவே உள்ளது.

இந்நிலையில் மெட்ரோ ரயிலில் இருந்தவாறு நான் எங்கு இருக்கிறேன் என ஆல்யா வெளியிட்ட விடியோவிலும், துபையில் இருப்பதாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.

Summary

parujadham serial actress Alya manasa dubai video goes viral

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.