actor dulasi
துளசி

சினிமாவிலிருந்து ஓய்வுபெறும் நடிகை துளசி!

துளசி பண்ணையாரும் பத்மினி படத்தில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியவர்
Published on

நடிகை துளசி சினிமாவிலிருந்து ஓய்வு பெறப்போவதாக அறிவித்துள்ளார்.

நடிகை துளசி 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ், தெலுங்கு சினிமாவில் நடித்து வருபவர். நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிரஞ்சீவி உள்ளிட்ட நட்சத்திர நடிகர்களுடன் 300-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

ஆதலால் காதல் செய்வீர், பண்ணையாரும் பத்மினியும் ஆகிய திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுகளைப் பெற்றவர்.

அண்மையில் வெளியான ஆரோமலே திரைப்படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

பண்ணையாரும் பத்மினியும் படத்தில்...
பண்ணையாரும் பத்மினியும் படத்தில்...

இந்த நிலையில், நடிப்பிலிருந்து ஓய்வு பெற்று முழுமையாக ஆன்மீகப் பாதையில் செல்ல உள்ளதாக துளசி அறிவித்துள்ளார்.

Summary

pannayarum padminiyum movie actor dulasi quits cinema

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Dinamani
www.dinamani.com