மெட்ரோ ரயில் பணி: அடையாறில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்இன்றும், நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புகிரிவலத்துக்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படும்எஸ்ஐஆா் நடவடிக்கை தொடங்கி ஓராண்டு நிறைவு: 6 கோடி வாக்காளா்கள் நீக்கம்ஈரான் எண்ணெய் கொள்முதலை இந்திய நிறுவனங்கள் உடனடியாக அதிகரிக்க வாய்ப்பில்லை: நிபுணா்கள்நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட வெனிசுலாவுக்கு இந்தியா நிவாரணப் பொருள்கள் உதவி
/

குந்தன் என்னைவிட்டு விலகவே இல்லை... காசியில் தனுஷ்!

குந்தன் கதாபாத்திரம் குறித்து தனுஷ்...

News image

தனுஷ்

Updated On :27 நவம்பர் 2025, 3:57 pm IST

நடிகர் தனுஷ் ராஞ்சனா திரைப்படத்தின் குந்தன் கதாபாத்திரம் குறித்து பதிவிட்டுள்ளார்.

நடிகர் தனுஷ் இயக்குநர் ஆனந்த் எல். ராய் கூட்டணியில் உருவான தேரே இஷ்க் மெய்ன் திரைப்படம் நாளை (நவ. 28) திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராஞ்சனா (அம்பிகாவதி) கதையின் உலகத்துடன் தொடர்புடைய கதையாகவே இப்படம் உருவாகியுள்ளது.

இந்த நிலையில், தேரே இஷ்க் மெய்ன் புரமோஷனுக்காக வாரணாசி சென்றுள்ள தனுஷ் தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில், “எல்லாம் எங்கு தொடங்கியதோ அந்த நினைவுப்பாதையில் நடக்கிறேன். குந்தன் (ராஞ்சனாவில் தனுஷ் பெயர்) என்கிற ஒரு கதாபாத்திரம் தசாப்த காலத்திற்கும் மேலாக என்னைவிட்டு விலக மறுத்துக்கொண்டே இருக்கிறது. பனாரஸின் குறுகிய வீதிகளில் மக்களால் இன்னும் குந்தனின் பெயர் எதிரொலிக்கும்போது நான் புன்னகையுடன் திரும்பிச் சிரிக்கிறேன்.

இப்போது அதே வீதிகளில், அதே வீட்டின் முன்பே, அதே தேநீர் கடையில், புனித கங்கை கரையில் குந்தன் கதாபாத்திரத்தை உருவாக்கியவருடன் நடந்தபோது முழுமையடைந்ததைப் போல உணர்ந்தேன். இந்த முறை இது ஷங்கருக்கான நேரம். தேரே இஷ்க் மெய்ன். நாளை வெளியாகிறது. ஹர ஹர மகாதேவ்” எனப் பதிவிட்டுள்ளார்.

Summary

dhanush posted about kundan and tere ishk mein

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.