‘பராசக்தி’ திரைப்படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை நடிகர் சிவகார்த்திகேயன் துவங்கியுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயன் - இயக்குநர் சுதா கொங்கரா ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் “பராசக்தி”. 1960-களில் மொழிப்போர் காலங்களில் மதராஸ் மாகாணத்தில் நடைபெறும் கதைகளத்துடன் இப்படம் உருவாகியுள்ளது.
இந்தப் படத்தில், நடிகர்கள் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷின் இசையில் உருவாகியுள்ள ‘பராசக்தி’ திரைப்படம் வரும் ஜனவரி 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகின்றது.
இந்த நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இப்படத்தில் தனது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை இன்று (நவ. 28) துவங்கியுள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
முன்னதாக, நடிகர்கள் ரவி மோகன், ஸ்ரீ லீலா ஆகியோர் தங்களது காட்சிகளுக்கான டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: துல்கர் சல்மானின் ஐயம் கேம் முதல் பார்வை போஸ்டர்!
Summary
Actor Sivakarthikeyan has begun dubbing for his scenes in the film 'Parasakthi'.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
சேயோன் படப்பிடிப்பு போஸ்டர்!

சிவகார்த்திகேயன் எழுதிய வேலும் மயிலும் பாடல்!
சிவகார்த்திகேயன் வரிகளில் வேலும் மயிலும் பாடல்!
சம்பளத்தை உயர்த்திய சிவகார்த்திகேயன்?
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி



