மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஆதிரை! இந்த வாரம் வெளியேறியது யார்?

பிக் பாஸ் வீட்டில் மீண்டும் ஆதிரை நுழைந்துள்ளதாகத் தகவல்.

News image
ஆதிரை- Photo : Vijay TV
Updated On :30 நவம்பர் 2025, 5:06 am

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் - 9 வீட்டுக்குள் மீண்டும் நடிகை ஆதிரை சென்றுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி தற்போது 8 வது வாரத்தை எட்டியுள்ளது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே, இந்த புதிய சீசனையும் தனக்கே உரித்தான பாணியில் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் வாட்டர் மெலன் ஸ்டார் என அழைக்கப்படும் திவாகர், அரோரா சின்கிளேர், பீட் பாக்ஸ் கலைஞர் எஃப்.ஜே. , விஜே பார்வதி, துஷார், கனி, சின்ன திரை நடிகர் சபரி, நடிகை கெமி, ரம்யா ஜோ, கானா வினோத், வியானா, சின்ன திரை நடிகர் பிரவீன், யூடியூபர் சுபிக்‌ஷா, விக்கல்ஸ் விக்ரம், கமுருதீன் உள்ளிட்ட 20 பேர் போட்டியாளர்களாக களம் இறக்கப்பட்டனர்.

தொடர்ந்து, வைல்டு கார்டு மூலம் திவ்யா கணேஷ், சாண்ட்ரா, பிரஜன், அமித் பார்கவ் ஆகிய 4 பேர் நுழைந்தனர். வைல்டு கார்டு போட்டியாளர்கள் வருகையால் போட்டி கடுமையானது.

ஒவ்வொரு வாரமும் மக்களிடம் குறைந்த வாக்குகளைப் பெற்றவர் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார். அதன்படி, நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர், கெமி ஆகியோர் வெளியேறியுள்ளனர். தற்போது பிக் பாஸ் வீட்டில் 15 பேர் உள்ளனர்.

இந்த வார வெளியேற்றத்திற்காக, சான்ட்ரா, ப்ரஜின், திவ்யா கணேஷ், கமருதீன், கனி திரு, எஃப்.ஜே., விக்ரம், அமித் பார்கவ், அரோரா சின்கிளேர், விஜே பார்வதி ஆகியோர் நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், யாரும் எதிர்பாராத வகையில், இந்த வாரம் வெளியேற்றம் ஏதுவும் இல்லை(No Eviction) என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், முன்னதாக வெளியேறிய நடிகை ஆதிரை மீண்டும் நிகழ்ழ்சிக்குள் சென்றுள்ளதாகத் தகவல் தெரியவந்துள்ளது. முன்னதாக ஆதிரை வெளியேறியபோது, அவர் சிறந்த போட்டியாளர், அவரை வெளியேற்றியிருக்கக் கூடாது என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர். இந்த நிலையில், அவர் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு மீண்டும் சென்றுள்ளார்.

நடிகை ஆதிரை வெளியே இருந்து விளையாட்டைப் பார்த்துவிட்டு, மீண்டும் பிக் பாஸ் வீட்டுக்கு செல்வதால், நிகழ்ச்சி மேலும் விறுவிறுப்படையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

summary

It is reported that Aadhir has re-entered the Bigg Boss house.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.