ராஜு பாய் வருகிறார்... எடிட் செய்யப்பட்டு மறுவெளியீடாகும் அஞ்சான்!
நடிகர் சூர்யாவின் அஞ்சான் திரைப்படத்தின் மறுவெளியீடு பற்றி...


நடிகர் சூர்யாவின் அஞ்சான் திரைப்படம் மீண்டும் எடிட் செய்யப்பட்டு மறுவெளியீடு செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் வெளியீட்டுத் தேதி குறித்து விரைவில் அறிவிக்கப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியானது அஞ்சான் திரைப்படம். ஒந்தப் படத்தில் சூர்யா, வித்யூத் ஜமால், சமந்தா முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருப்பார்கள்.
இந்தப் படம் சமூக வலைதளங்களின் விமர்சனங்களால் மிகவும் மோசமான பின்னடைவைச் சந்தித்தது.
யுவன் ஷங்கர் ராஜாவின் பாடல்கள் வைரலானாலும் படத்தில் வரும் ராஜு பாய் கதாபாத்திரம் இன்றளவும் மீம்ஸ்களாக வலம்வருகிறது.
இந்நிலையில், இந்தப் படத்தை மறு எடிட் செய்து கூடுதல் சுவாரசியமாக உருவாக்கி உள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா, ரெட்டோ கலவையான விமர்சனங்களைப் பெற்றன. இருப்பினும் ரெட்ரோ வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
தற்போது, சூர்யா கறுப்பு படத்தில் நடித்து முடித்துள்ளார். சூர்யா 46 படத்திலும் நடித்து வருகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...