காந்தாரா சாப்டர் - 1 திரைப்படத்தின் காட்சியொன்று ரசிகர்களால் கேலி செய்யப்பட்டு வருகிறது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் - 1 படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வரவேற்பும் கிடைத்திருப்பதால் இதுவரை ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், தற்போது வரை இந்தியாவின் பல பகுதிகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருவதால் தீபாவளிக்குள் ரூ. 700 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற பிரம்மகலாஷா பாடலில் ஒரு காட்சியில் தண்ணீர் கேன் இடம்பெற்றுள்ளது. படப்பிடிப்பின்போது வைக்கப்பட்ட அதனை எடிட்டிங்கில் நீக்காமல் விட்டிருக்கின்றனர்.
இதனைக் கண்ட ரசிகர்கள் 400 ஆண்டுகளுக்கு முந்தைய கதையாக உருவான இப்படத்தில் தண்ணீர் கேன் போட வந்தது யார்? எனக் கேலி செய்து வருகின்றனர்.
இது அவ்வளவு பெரிய தவறு இல்லையென்றாலும் உருவாக்க ரீதியாகப் பார்க்கும்போது கவனக்குறைவாக இருந்தது அக்காட்சியின் அழுத்தத்தைக் குறைக்கவே செய்கிறது.
இதையும் படிக்க: எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண்!
Summary
netizens trolled kantara chapter - 1 scene
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீதிக் கதைகள்! கிடைக்கும் வாய்ப்புகளைப் பயன்படுத்துவதில் கவனம்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளிலும் 126 வேட்புமனுக்கள் ஏற்பு: 56 வேட்புமனுக்கள் தள்ளுபடி
தயவுசெய்து படத்தில் வைக்காதீர்கள்... கருப்பு பாடலால் புலம்பும் ரசிகர்கள்!

மட்டஞ்சேரி மாஃபியா என்றால் என்ன?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


