காந்தாரா சாப்டர் - 1 திரைப்படத்தின் காட்சியொன்று ரசிகர்களால் கேலி செய்யப்பட்டு வருகிறது.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் - 1 படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வரவேற்பும் கிடைத்திருப்பதால் இதுவரை ரூ. 500 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், தற்போது வரை இந்தியாவின் பல பகுதிகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருவதால் தீபாவளிக்குள் ரூ. 700 கோடிக்கும் அதிகமாக வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற பிரம்மகலாஷா பாடலில் ஒரு காட்சியில் தண்ணீர் கேன் இடம்பெற்றுள்ளது. படப்பிடிப்பின்போது வைக்கப்பட்ட அதனை எடிட்டிங்கில் நீக்காமல் விட்டிருக்கின்றனர்.
இதனைக் கண்ட ரசிகர்கள் 400 ஆண்டுகளுக்கு முந்தைய கதையாக உருவான இப்படத்தில் தண்ணீர் கேன் போட வந்தது யார்? எனக் கேலி செய்து வருகின்றனர்.
இது அவ்வளவு பெரிய தவறு இல்லையென்றாலும் உருவாக்க ரீதியாகப் பார்க்கும்போது கவனக்குறைவாக இருந்தது அக்காட்சியின் அழுத்தத்தைக் குறைக்கவே செய்கிறது.
இதையும் படிக்க: எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண்!
Summary
netizens trolled kantara chapter - 1 scene
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மாணவியை கேலி செய்த கல்லூரி மாணவா் கைது
கஞ்சா பறிமுதல்: திரிபுரா இளைஞா் கைது

ஓடிடியில் வெளியாகும் காந்தாரா நடிகையின் புதிய திரைப்படம்!

அதீத நடிப்புக்கு 50 பைசா குறைக்கப்படும்..! முகமது ரிஸ்வானைக் கேலி செய்த வங்கதேச வீரர்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



